மதுரை: பொங்கல் சீசனையொட்டி கீழ்க்கண்ட சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. சென்னை எழும்பூர்- தூத்துக்குடி (0685) ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,5,12,19,26 ல் நள்ளிரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 க்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (0686) ரயில் ஜன.,6, 13, 20, 27 ல் இரவு 8.45 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.50 க்கு எழும்பூர் சென்றடையும்.
சென்னை எழும்பூர்- திருநெல்வேலி (0603) ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,1, 8, 15, 22, 29 ல் இரவு 8.25 மணிக்கு புறப் பட்டு மறுநாள் காலை 9.30 க்கு திருநெல்வேலி அடையும். திருநெல்வேலி-சென்னை எழும்பூர் (0604) ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜன.,2, 9, 16, 23, 30 ல் பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 க்கு எழும்பூர் அடையும்.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (0609) ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,3, 10, 17, 24,31 ல் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 க்கு நாகர்கோவில் அடையும். நாகர்கோவில்-சென்னை எழும்பூர் (0610) ரயில் ஜன.,4, 11, 18, 25 மற்றும் பிப்.,1 ல் நாகர்கோவிலில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 க்கு எழும்பூர் அடையும்.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (0611) வாராந்திர ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,2, 9, 16, 23, 30 ல் நள்ளிரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 2.30 க்கு நாகர்கோவிலை அடையும். நாகர் கோவில் - சென்னை எழும்பூர் (0612) வாராந்திர ரயில் நாகர்கோவிலிலிருந்து ஜன.,3, 10, 17, 24, 31 ல் இரவு 7.40 மணி க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 க்கு எழும்பூர் அடையும்.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி (0605) வாராந்திர ரயில் எழும்பூரிலிருந்து ஜன., 4, 11, 18, 25 ல் நள்ளிரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 க்கு திருநெல்வேலி அடையும். திருநெல்வேலி - சென்னை எழும்பூர் (0606) ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜன., 5, 12, 19, 26 ல் பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15க்கு எழும்பூர்அடையும். சென்னை எழும்பூர் -நாகர்கோவில் (0607) வாராந்திர ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,7, 14, 21, 28 ல் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 11 க்கு நாகர்கோவிலை அடையும்.
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் (0608) வாராந்திர ரயில் நாகர்கோவிலிருந்து ஜன.,1,8,15, 22, 29 ல் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 க்கு எழும்பூர் அடையும். சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் (0613) ரயில் சென்ட்ரலிலிருந்து டிச.,27, 29, 31 ல் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.35 க்கு கர்கோவிலைஅடையும்.நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் (0614) ரயில் நாகர்கோவிலிருந்து டிச.,28, 30, ஜன.,1ல் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 க்கு சென்ட்ரலை அடையும்.
Source : Dinamalar
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, December 26, 2008
சென்னை-நாகர்கோவில் பொங்கல் சிறப்பு ரயில்கள்
Posted by Arul at Friday, December 26, 2008 0 comments
Labels: c, எழும்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, பொங்கல், மதுரை
Tuesday, December 23, 2008
1000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
ராஜபாளையம் : வீட்டிற்கு வாணம் தோண்டும் போது, 1000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவருக்கு சொந்தமான நிலத்தில், வீடு கட்டுவதற்காக, நேற்று, வாணம் தோண்டப்பட்டது. அப்போது, இரண்டே கால் அடி உயரம் கொண்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அதனுள், மண்டை ஓடு, கத்தி, கல், எலும்புகள் இருந்தன. முதுமக்கள் தாழி மற்றும் அதிலிருந்த பொருட்கள் தாசில்தார் காளிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. வரலாற்றுத்துறை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "முந்தைய காலத்தில் நோய் வாய்ப்பட்டு, செயலாற்றும் தன்மையின்றி இறுதி காலத்தில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களை, பெரிய மண் பானைக்குள்(முதுமக்கள் தாழி) உட்கார வைத்து, மண்ணில் புதைத்துவிடும் பழக்கம் இருந்தது. ராஜபாளையத்தில் கண்டறியப்பட்ட தாழியில் கத்தி இருந்ததால், அதில் இறந்தவர் ஊர் தலைவராக இருக்கலாம். இது 1000 ஆண்டுக்கு முந்தையதாக இருக்கக்கூடும்' என்றார்.
Source : Dinamalar
Posted by Arul at Tuesday, December 23, 2008 0 comments
Monday, December 22, 2008
விண்ணில் பாய்ந்தது வர்த்தக செயற்கைக்கோள்
சென்னை:இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தக ரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வர்த்தக ரீதியாக செயற்கைக்கோள் களை உருவாக்கி, விண்ணில் ஏவி வரு கிறது. அத்தகைய அதிநவீன "டபிள்யு.2.எம்.,' என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 4.05 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஏரியேன்-5 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப் பட்டது.இந்த செயற்கைக்கோள் 3,463 கிலோ எடை கொண்டது. இஸ்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இதுவே. விண்ணில் செலுத்தப் பட்ட 32வது நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்தது.
செயற்கைக்கோளில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹசனில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு திட்டமிட்டபடி சிக்னல்கள் கிடைக்கத் துவங்கியுள்ளன.இந்த செயற்கைக் கோள் 15 ஆண்டுகளுக்கு தனது பணியைச் செய்யும் திறன்மிக்கது. அதற்கேற்ப சூரிய ஒளியில் இருந்து அதிகபட்சமாக 7,000 வாட் வரை மின்உற்பத்தி செய்யவும், இதில் வசதி உள்ளது.
Source :
Posted by Arul at Monday, December 22, 2008 0 comments
70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னை:சென்னையில் 4 லட்சத்து 42 ஆயிரம் குழந்தைகள் உட்பட, தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. போலியோவை முற்றிலும் ஒழிக்க நேற்றும், வரும் பிப்ரவரி முதல் தேதியும் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து கொடுக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, நாடு முழுவதும் சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சிறப்பு முகாம் களில் நேற்று போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தவர்களுக்கும், முகாம் நாளான நேற்று மீண்டும் கொடுக்கப்பட்டது. பிறந்து ஒன்றிரண்டு நாட்களான குழந்தைகளுக்கும் இம்மருந்து கொடுக்கப்பட்டது.போலியோ மருந்து கொடுக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தனது இல்லத்தில் நேற்று காலை துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள், சுற்றுலா மையங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையங்களில் சொட்டு மருந்துகள் இலவச மாக வழங்கப்பட்டன.சொட்டு மருந்து கொடுத்ததும், குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் "ஜென்ஷன் வயலட்' என்ற அடையாள "மை' வைக்கப்பட்டது.
விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து கொடுப்ப தற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் பன் னீர் செல்வம், நிருபர்களிடம் கூறும்போது, ""தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதற்கான பணியில் 40 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். போலியோவை அறவே ஒழிக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கலந்துகொண்டன,'' என்றார்.
Source: Dinamalar
Posted by Arul at Monday, December 22, 2008 0 comments
தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் ஆரம்பம்
கோவை:தமிழகம் முழுவதும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் கொண்ட 385 "மாதி ரிப்பள்ளிகள்' உருவாக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, கல்வியில் பின்தங்கிய 11 மாவட்டங்களில், 38 பள்ளிகளை துவங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தனியார் பள்ளிகளைப் போல் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட "மாதிரிப் பள்ளி'களை துவக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள் ளது.
தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், முதல் கட்டமாக கல்வியில் பின்தங் கிய 11 மாவட்டங்களை சேர்ந்த 38 ஒன்றியங்களில் இந்த மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட உள்ளன.கல்வியறிவு பெற்ற பெண்கள் 50 சதவீதத்துக்கு குறைவாக இருப்பது, ஆண், பெண் எண்ணிக்கையின் வேறுபாடு 20 சதவீதத்துக்கு கூடுதலாக இருப்பது ஆகிய இரு அம்சங் களின் அடிப்படையில் மாதிரிப் பள்ளிகள் துவங்குவதற்கான ஒன்றியங்கள் தேர்வு செய் யப்படுகின்றன.
நாடு முழுவதும் இது போல் 2,500 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படவுள்ளன. 10 ஏக்கர் பரப் பளவில் அமையவுள்ள ஒவ்வொரு பள்ளியும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டதாக அமைக்கப் படும்.அனைவருக்கும் கல்வி இயக்கம் போல, "அனைவருக்கும் இடைநிலைக் கல்வி' என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு "ராஷ்ட்ரீய மத்ய மிக் சிக்ஷா அபியான்' (தேசிய இடைநிலை கல்வி இயக்கம்) என பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு 75 சதவீதமும் மாநில அரசு 25 சதவீதமும் இத்திட்டத்துக்கு நிதியுதவி அளிக்கின்றன. இந்த சிறப்பு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். மண்டல அளவில் மாணவ மாணவியருக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இந்த பள்ளிகளுக்கு மாணவ மாணவி யரை தேர்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் குறித்து விவாதிக்க, விழுப்புரம், ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட- கல்வியில், பின்தங்கிய 11 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டம், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அலுவலகத்தில் நடந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாதிரிப் பள்ளிகள் துவங்க இடம் தேர்வு செய்வது, நுழைவுத் தேர்வு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
Source: Dinamalar
Posted by Arul at Monday, December 22, 2008 0 comments
Labels: Dinamalar, TamilNadu, இந்தியா, ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, மாதிரிப் பள்ளி, விழுப்புரம்
Thursday, December 18, 2008
ஏ.டி.எம்., கார்டு உபயோக கட்டணம் ரத்து
இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டைப் பயன்படுத்தி, பிற வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்பதற்கு, ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அவர் கூறியதாவது, நாடு முழுவதும் இந்தியன் வங்கிக்கு 1,580 கிளைகள் உள்ளன. 670 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. 28 லட்சம் ஏ.டி.எம்., கார்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கின்றனர். ஒரு ஏ.டி.எம்., மையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 பேர் பணம் எடுக்கின்றனர். 27 ஏ.டி.எம்., மையங்களில் ரயில் டிக்கெட் பெறும் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பிற வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுத்தால் அந்த வங்கிகள் இந்தியன் வங்கியிடம் 18 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படாது. எந்த வங்கியில் வேண்டுமானாலும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்தியன் வங்கி சார்பில் ஐந்து லட்சம் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 250 ஏ.டி.எம்., இயந்திரங்கள் புதிதாக வாங்க உள்ளோம். ஏ.டி.எம்., மையங்கள் தேவையான இடங்களில் அவை பொருத்தப் படும். இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்தார்.
src: http://www.dinamalar.com
Posted by Arul at Thursday, December 18, 2008 0 comments
Labels: Dinamalar, TamilNadu, அடம், இந்தியன் பேங்க், இந்தியன் வங்கி, இந்தியா, ஏ.டி.எம், சர்வீஸ் charge, பணம்
Monday, December 15, 2008
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்: இந்தியா வெற்றி
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்: இந்தியா வெற்றி
Posted by Arul at Monday, December 15, 2008 0 comments
Labels: Dinamalar, India, TamilNadu, இங்கிலாந்து, இந்தியா, கிரிக்கெட், டெஸ்ட் மேட்ச்