Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, May 20, 2010

இந்தியாவின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள்: அப்துல் கலாம்

விருதுநகர் : விருதுநகர் அருகே தோனுகால் கிராமத்தில் புரா திட்டத்தை துவக்கி வைத்து ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இந்திய நாட்டின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள் என்றார்.

தோனுகாலில் நடந்த விழாவிற்கு வந்த இரவு 9.12 மணிக்கு வந்த அப்துல் கலாமிற்கு கிராமத்தின் சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது. மேடைக்கு வந்த அப்துல்கலாம் லயன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்ட பள்ளி மாணவர்கள் குடி நீருக்கான சுத்திகரிப்பு இயந்திரம், சிறுநீரக நோயளிகளுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தும் நடமாடும் வேன் ஆகியவற்றை துவக்கி வைத்தார். மேலும் மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி சார்பில் தோனுகால் கிராமத்தில் நகரத்துக்கு இணையான மருத்து வசதியான டெலி மெடிஷன் சென்டர், 'இ' லியர்னிங் சென்டர், வேலைவாயப்பு ஐகிராண்டி ஆகிய வசதிகளை துவக்கி வைத்தார். முன்னதாக அப்பதுல்கலாமை வரவேற்று அவரது தவியாளர் பொன்ராஜ் பேசினார். புரா திட்டம் குறித்து மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியின் துணை தலைவர் டாக்டர் குரு சங்கர், மகாசேமம் திட்டம் குறித்து துணைத்தலைவர் பன்னீர் செல்வம், நடமாடும் டயாலிசிஸ் வேன், சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் இயந்திரம் குறித்து மாவட்ட லயன்ஸ் ஆளுனர் டாக்டர் வேலுச்சாமி பேசினார். விருதுநகர் கலெக்டர் சிஜி தாமஸ் உட்பட பலர் பேசினார்கள்.

மகாசேமம் திட்டத்தில் மகளிர் குழுவிற்கு நலத்திட்ட உதவிகள், பள்ளி மாணவர்களுக்கு இலவச காலனி வழங்கி பாரத ரத்னா அப்துல்கலாம் பேசியதாவது: இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய சொத்து 46 கோடி இளைஞர்கள் தான் இவர்கள் எழுச்சி பெற வேண்டும். பறந்து கொண்டிருக்கும் நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் முடியாது என்ற சொல்லை மாற்றி என்னால் முடியும் என்ற உறுதியுடன் செயல்பட வேண்டும். தோல்விகளை, தோல்வியடைய செய்து வெற்றி பெற கடுமையாக உழைத்து இந்த நாட்டை வளமாக்க வேண்டும். இளைஞர்களுக்கு பத்து கட்டளைகளை தெரிவிக்கிறேன் அதனை பின்பற்றுங்கள். ஒருவர் உயர தாய், தந்தை, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ஆகியவர்ளை நினைத்தால் வளர்ச்சி சிறக்கும். ஐந்து குணங்கள் வேண்டும். லட்சியம், அறிவை தேடி கடும் உழைப்பு, பிரச்னைக்கு தீர்வு, நல்ல ஒழுக்கம் இருந்தால் வாழ்வில் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார். மீனாட்சி மிஷன் அருள் மொழி நன்றி கூறினார்.

நன்றி : தினமலர்

Tuesday, May 18, 2010

லைலா புயல் ; சென்னை - நாகை ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை : வங்க கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால் வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கு கிழக்கே அந்தமான் கடல் பகுதியில் சென்னையில் இருந்து சுமார் 700 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் வட மேற்காக நகர்ந்து ஆந்திரா நோக்கி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கடலூர் நோக்கி மையம் கொண்டுள்ளது. இந்த மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறும் என தெரிகிறது.



மணிக்கு 17 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. எந்த அளவிற்கு எப்போது வலுப்பெறும் என வானிலை ஆராய்ச்சிமையம் மதியத்திற்குமேல்தான் அறுதியிட்டு கூற முடியும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புயலுக்கு லைலா என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் அலைகளின் சீற்றம் ( 12 அடி உயரம் எழும்பும்) அதிகரிக்கும். காற்று மணிக்கு 65 கி.மீட்டர் முதல் 85 கி.மீட்டர் வரை இருக்கும். லேசான முதல் கனத்த மழை பெய்யக்கூடும். சென்னை, நாகை, ராமேஸ்வரம், காக்கிநாடா, புதுச்சேரி பகுதிகளில் நல்ல மழை இருக்கும்.



இன்று இரவு முதல் இன்னும் 48 மணி நேரத்திற்கு இந்த லைலா புயல் காரணமாக தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை துணை இயக்குனர் குழந்தைவேலு தெரிவித்துள்ளார். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என கேட்கப்பட்டிருக்கின்றனர். ஆந்திர கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்றும் அவர் மேலும் கூறினார். Dinamalar Top News, Top News Stories & Headlines, Top India & World News Detail