சபரிமலை : சபரிமலையில் சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. மண்டல பூஜையின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதற்கான தங்க அங்கி ஆரன்முழாவில் இருந்து வந்துள்ளது. நாளை மண்டல பூஜை நிறைவடைவதையொட்டி, பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Source : Dinamalar

No comments:
Post a Comment