Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, February 24, 2009

பாலக்காடு கோவிலில் 'யானை ஓட்டம்': தினமலர்

பாலக்காடு கோவிலில் 'யானை ஓட்டம்': தினமலர்: "பாலக்காடு கோவிலில் 'யானை ஓட்டம்'

பிப்ரவரி 24,2009,00:00 IST

பாலக்காடு : கோவை, பாலக்காடு அருகேயுள்ள கல்லேக்குளங்கரை சிவன் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு, நேற்று 'யானை ஓட்டம்' நிகழச்சி நடந்தது. ஆண்டுதோறும் சிவராத்திரி விழா, இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி தினமான நேற்று கல்பாத்தி நதியில் மகாதேவர் யானை மீது அமர்ந்து சென்று, ஆறாட்டுக்கடவில், நீராடினார். பகல் 12.00 மணியளவில் செண்டை வாத்தியங்கள் முழங்க, கோவில் வந்தடைந்தார். பின், பக்தர்களின் ஆரவாரம் முழங்க கோவில் வளாகத்தில் ஏழு முறை யானையோட்டம் நடந்தது. யானைக்கு பின்னால், விரதமிருந்த ஆண்களும், பெண்களும் ஏழு முறை வலம் வந்தனர். தொடர்ந்து, அய்யப்ப சேவா சங்கத்தினரின் அன்னதானம் நடந்தது."