வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் கொண்டாட்டம்: தினமலர்: "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் கொண்டாட்டம்
ஜனவரி 15,2009,00:00 IST
திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடந்த தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர்.தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழாவை கொண்டாட இங்கிலாந்து, பிரான்ஸ், தாய்லாந்து, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த 14 சுற்றுலாப் பயணிகளை தமிழக சுற்றுலா துறையினர் திருச்சுழிக்கு அழைத்து வந்தனர்.
இவர்களை ஊராட்சித் தலைவர் பாஸ்கரன் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றார். கோலப்போட்டிகள்,பகவான் ரமண மகரிஷி பிறந்த இல்லத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகள் திருமேனிநாதர் துணைமாலையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இவர்களை கவரும் வகையில் கரகாட்டம், ஒயிலாட்டம் நடந்தன. கோயில் முன் பொங்கலிட்ட பெண்களுடன் சேர்ந்து வெளிநாட்டினரும் பொங்கல் வைத்தனர். விளையாட்டுப் போட்டிகளிலும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தமிழக சுற்றுலாத்துறை அதிகாரி தர்மராஜ், கோயில் செயல் அலுவலர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 15, 2009
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பொங்கல் கொண்டாட்டம்: தினமலர்
Posted by Arul at Thursday, January 15, 2009
No comments:
Post a Comment