மதுரை: பொங்கல் சீசனையொட்டி கீழ்க்கண்ட சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. சென்னை எழும்பூர்- தூத்துக்குடி (0685) ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,5,12,19,26 ல் நள்ளிரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 க்கு தூத்துக்குடி சென்றடையும். தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (0686) ரயில் ஜன.,6, 13, 20, 27 ல் இரவு 8.45 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.50 க்கு எழும்பூர் சென்றடையும்.
சென்னை எழும்பூர்- திருநெல்வேலி (0603) ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,1, 8, 15, 22, 29 ல் இரவு 8.25 மணிக்கு புறப் பட்டு மறுநாள் காலை 9.30 க்கு திருநெல்வேலி அடையும். திருநெல்வேலி-சென்னை எழும்பூர் (0604) ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜன.,2, 9, 16, 23, 30 ல் பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 க்கு எழும்பூர் அடையும்.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (0609) ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,3, 10, 17, 24,31 ல் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.15 க்கு நாகர்கோவில் அடையும். நாகர்கோவில்-சென்னை எழும்பூர் (0610) ரயில் ஜன.,4, 11, 18, 25 மற்றும் பிப்.,1 ல் நாகர்கோவிலில் இருந்து பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 க்கு எழும்பூர் அடையும்.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (0611) வாராந்திர ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,2, 9, 16, 23, 30 ல் நள்ளிரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 2.30 க்கு நாகர்கோவிலை அடையும். நாகர் கோவில் - சென்னை எழும்பூர் (0612) வாராந்திர ரயில் நாகர்கோவிலிலிருந்து ஜன.,3, 10, 17, 24, 31 ல் இரவு 7.40 மணி க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.15 க்கு எழும்பூர் அடையும்.
சென்னை எழும்பூர்-திருநெல்வேலி (0605) வாராந்திர ரயில் எழும்பூரிலிருந்து ஜன., 4, 11, 18, 25 ல் நள்ளிரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12.30 க்கு திருநெல்வேலி அடையும். திருநெல்வேலி - சென்னை எழும்பூர் (0606) ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜன., 5, 12, 19, 26 ல் பகல் 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15க்கு எழும்பூர்அடையும். சென்னை எழும்பூர் -நாகர்கோவில் (0607) வாராந்திர ரயில் எழும்பூரிலிருந்து ஜன.,7, 14, 21, 28 ல் இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பகல் 11 க்கு நாகர்கோவிலை அடையும்.
நாகர்கோவில்-சென்னை எழும்பூர் (0608) வாராந்திர ரயில் நாகர்கோவிலிருந்து ஜன.,1,8,15, 22, 29 ல் பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 க்கு எழும்பூர் அடையும். சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் (0613) ரயில் சென்ட்ரலிலிருந்து டிச.,27, 29, 31 ல் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.35 க்கு கர்கோவிலைஅடையும்.நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் (0614) ரயில் நாகர்கோவிலிருந்து டிச.,28, 30, ஜன.,1ல் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 க்கு சென்ட்ரலை அடையும்.
Source : Dinamalar
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, December 26, 2008
சென்னை-நாகர்கோவில் பொங்கல் சிறப்பு ரயில்கள்
Posted by Arul at Friday, December 26, 2008 0 comments
Labels: c, எழும்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, பொங்கல், மதுரை
Tuesday, December 23, 2008
1000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
ராஜபாளையம் : வீட்டிற்கு வாணம் தோண்டும் போது, 1000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவருக்கு சொந்தமான நிலத்தில், வீடு கட்டுவதற்காக, நேற்று, வாணம் தோண்டப்பட்டது. அப்போது, இரண்டே கால் அடி உயரம் கொண்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அதனுள், மண்டை ஓடு, கத்தி, கல், எலும்புகள் இருந்தன. முதுமக்கள் தாழி மற்றும் அதிலிருந்த பொருட்கள் தாசில்தார் காளிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. வரலாற்றுத்துறை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "முந்தைய காலத்தில் நோய் வாய்ப்பட்டு, செயலாற்றும் தன்மையின்றி இறுதி காலத்தில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களை, பெரிய மண் பானைக்குள்(முதுமக்கள் தாழி) உட்கார வைத்து, மண்ணில் புதைத்துவிடும் பழக்கம் இருந்தது. ராஜபாளையத்தில் கண்டறியப்பட்ட தாழியில் கத்தி இருந்ததால், அதில் இறந்தவர் ஊர் தலைவராக இருக்கலாம். இது 1000 ஆண்டுக்கு முந்தையதாக இருக்கக்கூடும்' என்றார்.
Source : Dinamalar
Posted by Arul at Tuesday, December 23, 2008 0 comments
Monday, December 22, 2008
விண்ணில் பாய்ந்தது வர்த்தக செயற்கைக்கோள்
சென்னை:இஸ்ரோ நிறுவனத்தின் வர்த்தக ரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வர்த்தக ரீதியாக செயற்கைக்கோள் களை உருவாக்கி, விண்ணில் ஏவி வரு கிறது. அத்தகைய அதிநவீன "டபிள்யு.2.எம்.,' என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 4.05 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
ஐரோப்பிய ஏரியேன்-5 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள், விண்ணில் செலுத்தப் பட்டது.இந்த செயற்கைக்கோள் 3,463 கிலோ எடை கொண்டது. இஸ்ரோ நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இதுவே. விண்ணில் செலுத்தப் பட்ட 32வது நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் பிரிந்து வெற்றிகரமாக சுற்றுப்பாதையை அடைந்தது.
செயற்கைக்கோளில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹசனில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு திட்டமிட்டபடி சிக்னல்கள் கிடைக்கத் துவங்கியுள்ளன.இந்த செயற்கைக் கோள் 15 ஆண்டுகளுக்கு தனது பணியைச் செய்யும் திறன்மிக்கது. அதற்கேற்ப சூரிய ஒளியில் இருந்து அதிகபட்சமாக 7,000 வாட் வரை மின்உற்பத்தி செய்யவும், இதில் வசதி உள்ளது.
Source :
Posted by Arul at Monday, December 22, 2008 0 comments
70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
சென்னை:சென்னையில் 4 லட்சத்து 42 ஆயிரம் குழந்தைகள் உட்பட, தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. போலியோவை முற்றிலும் ஒழிக்க நேற்றும், வரும் பிப்ரவரி முதல் தேதியும் இரண்டு கட்டங்களாக போலியோ சொட்டு மருந்து கொடுக்க அரசு முடிவு செய்தது. இதன்படி, நாடு முழுவதும் சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சிறப்பு முகாம் களில் நேற்று போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. ஓரிரு நாட்களுக்கு முன் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தவர்களுக்கும், முகாம் நாளான நேற்று மீண்டும் கொடுக்கப்பட்டது. பிறந்து ஒன்றிரண்டு நாட்களான குழந்தைகளுக்கும் இம்மருந்து கொடுக்கப்பட்டது.போலியோ மருந்து கொடுக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தனது இல்லத்தில் நேற்று காலை துவக்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள், சுற்றுலா மையங்களில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மையங்களில் சொட்டு மருந்துகள் இலவச மாக வழங்கப்பட்டன.சொட்டு மருந்து கொடுத்ததும், குழந்தைகளின் இடது கை சுண்டு விரலில் "ஜென்ஷன் வயலட்' என்ற அடையாள "மை' வைக்கப்பட்டது.
விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து கொடுப்ப தற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் பன் னீர் செல்வம், நிருபர்களிடம் கூறும்போது, ""தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தை களுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதற்கான பணியில் 40 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். போலியோவை அறவே ஒழிக்கும் பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கலந்துகொண்டன,'' என்றார்.
Source: Dinamalar
Posted by Arul at Monday, December 22, 2008 0 comments
தமிழகத்தில் மாதிரி பள்ளிகள் ஆரம்பம்
கோவை:தமிழகம் முழுவதும் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் கொண்ட 385 "மாதி ரிப்பள்ளிகள்' உருவாக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக, கல்வியில் பின்தங்கிய 11 மாவட்டங்களில், 38 பள்ளிகளை துவங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தனியார் பள்ளிகளைப் போல் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட "மாதிரிப் பள்ளி'களை துவக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள் ளது.
தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில், முதல் கட்டமாக கல்வியில் பின்தங் கிய 11 மாவட்டங்களை சேர்ந்த 38 ஒன்றியங்களில் இந்த மாதிரிப் பள்ளிகள் துவங்கப்பட உள்ளன.கல்வியறிவு பெற்ற பெண்கள் 50 சதவீதத்துக்கு குறைவாக இருப்பது, ஆண், பெண் எண்ணிக்கையின் வேறுபாடு 20 சதவீதத்துக்கு கூடுதலாக இருப்பது ஆகிய இரு அம்சங் களின் அடிப்படையில் மாதிரிப் பள்ளிகள் துவங்குவதற்கான ஒன்றியங்கள் தேர்வு செய் யப்படுகின்றன.
நாடு முழுவதும் இது போல் 2,500 மாதிரிப் பள்ளிகள் துவங்கப்படவுள்ளன. 10 ஏக்கர் பரப் பளவில் அமையவுள்ள ஒவ்வொரு பள்ளியும், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டதாக அமைக்கப் படும்.அனைவருக்கும் கல்வி இயக்கம் போல, "அனைவருக்கும் இடைநிலைக் கல்வி' என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு "ராஷ்ட்ரீய மத்ய மிக் சிக்ஷா அபியான்' (தேசிய இடைநிலை கல்வி இயக்கம்) என பெயரிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு 75 சதவீதமும் மாநில அரசு 25 சதவீதமும் இத்திட்டத்துக்கு நிதியுதவி அளிக்கின்றன. இந்த சிறப்பு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும். மண்டல அளவில் மாணவ மாணவியருக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் இந்த பள்ளிகளுக்கு மாணவ மாணவி யரை தேர்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இத்திட்டம் குறித்து விவாதிக்க, விழுப்புரம், ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட- கல்வியில், பின்தங்கிய 11 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களின் கூட்டம், கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், அலுவலகத்தில் நடந்தது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாதிரிப் பள்ளிகள் துவங்க இடம் தேர்வு செய்வது, நுழைவுத் தேர்வு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
Source: Dinamalar
Posted by Arul at Monday, December 22, 2008 0 comments
Labels: Dinamalar, TamilNadu, இந்தியா, ஈரோடு, சிவகங்கை, புதுக்கோட்டை, மாதிரிப் பள்ளி, விழுப்புரம்
Thursday, December 18, 2008
ஏ.டி.எம்., கார்டு உபயோக கட்டணம் ரத்து
இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டைப் பயன்படுத்தி, பிற வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுப்பதற்கு, ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். காஞ்சிபுரத்தில் அவர் கூறியதாவது, நாடு முழுவதும் இந்தியன் வங்கிக்கு 1,580 கிளைகள் உள்ளன. 670 ஏ.டி.எம்., மையங்கள் உள்ளன. 28 லட்சம் ஏ.டி.எம்., கார்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேர் ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கின்றனர். ஒரு ஏ.டி.எம்., மையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 400 பேர் பணம் எடுக்கின்றனர். 27 ஏ.டி.எம்., மையங்களில் ரயில் டிக்கெட் பெறும் முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது இந்தியன் வங்கி ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பிற வங்கி ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுத்தால் அந்த வங்கிகள் இந்தியன் வங்கியிடம் 18 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படாது. எந்த வங்கியில் வேண்டுமானாலும் கட்டணமின்றி பணம் எடுத்துக் கொள்ளலாம். இந்தியன் வங்கி சார்பில் ஐந்து லட்சம் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. 250 ஏ.டி.எம்., இயந்திரங்கள் புதிதாக வாங்க உள்ளோம். ஏ.டி.எம்., மையங்கள் தேவையான இடங்களில் அவை பொருத்தப் படும். இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்தார்.
src: http://www.dinamalar.com
Posted by Arul at Thursday, December 18, 2008 0 comments
Labels: Dinamalar, TamilNadu, அடம், இந்தியன் பேங்க், இந்தியன் வங்கி, இந்தியா, ஏ.டி.எம், சர்வீஸ் charge, பணம்
Monday, December 15, 2008
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்: இந்தியா வெற்றி
இந்தியா-இங்கிலாந்து முதல் டெஸ்ட்: இந்தியா வெற்றி
Posted by Arul at Monday, December 15, 2008 0 comments
Labels: Dinamalar, India, TamilNadu, இங்கிலாந்து, இந்தியா, கிரிக்கெட், டெஸ்ட் மேட்ச்
Thursday, November 27, 2008
என் தாய்நாடு இந்தியா
என் தாய்நாடு இந்தியா. இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள். என் தாய்த்திருநாட்டை நான் உளமார நேசிக்கிறேன். வளமும் வேறுபாடும் நிறைந்த அதன் மரபினை எண்ணி நான் இறும்பூது அடைகிறேன். அன்னதன் புகழுக்கேற்ப தகுதியுடைய நன்மகனாய் விளங்க நான் என்றும் முயல்வேன்.
அன்புடன் என்னை ஈன்ற அன்னை, ஆருயிர்த் தந்தை, ஆசிரியப்பெருந்தகை, ஆன்ற முதியோர் அனைவரையும் வணங்குவேன். அன்னாரது புகழுக்கேற்ப தகுதியுடைய நன்மகனாய் விளங்க நான் என்றும் முயல்வேன்.
என் நாட்டிற்கும் என் நாட்டு மக்களுக்கும் என் வந்தனம் என்றும் உரியது. என் நாட்டவர் வாழ்வில் நலமும் வளமுமே போற்றதுஇன்பமென நான் உளம்பூரிப்போடு உறுதி கூறுகிறேன்
Posted by Arul at Thursday, November 27, 2008 0 comments
Labels: Dinamalar, TamilNadu, இந்தியா, உறுதிமொழி. ஸ்கூல், பள்ளிக்கூடம்
Wednesday, November 26, 2008
??????? ?????????? ?????? ????
சென்னை: "குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கைக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் தரைக்காற்று வீசுவதோடு, மழை பெய்யவும் வாய்ப்புள்ளது' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு வடக்கு பகுதியில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று மாலை நிலவரப்படி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அந்த இடத்திலேயே நிலை கொண்டிருப்பதால், எந்தப் பக்கம் நோக்கி நகரும் என்பது இன்று தெரியும். இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் விளைவாக தென் தமிழகம், வடக்கு கடலோர மாவட் டங்களில் கன மழை பெய்யும். நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் 30 செ.மீ., தஞ்சாவூர் மற்றும் ராமநாதபுரம், மண்டபத்தில் 25 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ., அளவு வரை மழை பெய்யும். மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண் டாம் என்று எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் 25 செ.மீ., வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கடலோர மாவட்டங்களிலும் கனமழை மற்றும் பலத்த மழை பெய்யும்.
சென்னையில் தரைக்காற்று வேகமாக வீசக்கூடும். வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று தாழ்வு மண்டலம் கரையை கடக்கக் கூடும். தமிழகத்தின் உட்பகுதியான வேலூர், சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு அருகில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று மாலை நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து காணப்பட்டது.
நாகப்பட்டினம், பாம்பன் இடையே, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப் பகுதிகளிலும், கடலோர மாவட்டங்களிலும் பலத்த கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source : http://www.dinamalar.com
Posted by Arul at Wednesday, November 26, 2008 0 comments
Labels: Dinamalar, TamilNadu, இந்தியா, சென்னை, நிஷா, புயல், மழை
Tuesday, April 15, 2008
Friday, March 28, 2008
See "Tamil On-Screen Keyboard iGoogle Gadget" on your Google homepage
Your friend, alarulrajan@gmail.com, has sent you the following Google Gadget and included this message:
Posted by Arul at Friday, March 28, 2008 0 comments
Friday, February 29, 2008
மத்திய பட்ஜெட் : விவசாய கடன் ரூ.60 ஆயிரம் கோடி தள்ளுபடி
புதுடில்லி : 2008 - 09 கான பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்தார்.
* அப்போது தனி நபர் வருமான வரி உச்சவரம்பு, ஆண்களுக்கு ரூ.1,50,000 ஆகவும், பெண்களுக்கு ரூ.1,80,000 ஆகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.2,25,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
* தனிநபர் வருமான வரிவிகிதம் ரூ.1.50 - 3 லட்சம் வரை 10 சதவீதம். ரூ.3 - 5 லட்சம் வரை 25 சதவீதம். ரூ.5 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
* இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு எக்ஸைஸ் டூட்டி 12 சதவீமாக குறைக்கப்பட்டுளளது.
* இது தவிர சிறு,குறு விவசாயிகளின் ( ஒன்று முதல் இரண்டு ஹெக்டேர் நிலம் வைத்திருப்பவர்கள் ) கடன்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். மார்ச் 2007 வரை வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் டிசம்பர் 2007 அன்று இருந்த கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த தொகை ரூ.60 ஆயிரம் கோடி என்றும், வங்கிகளில் இருக்கும் மொத்த கடன் தொகையில் இது 4 சதவீதம் என்றும் தெரிவித்தார்.மற்ற விவசாயிகளின் கடன் தொகைக்காக ஒரு திட்டம் கொண்டு வரப்படுகிறது.
* மேலும் அங்கன்வாடி ஊழியர்களுக்கான சம்பளம் மாதம் ரூ.1500 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். அதே போல அங்கன்வாடி உதவியாளர்களுக்கான சம்பளமும் ரூ.750 ஆக உயர்த்தப்படும் என்றார். இதனால் இந்தியாவில் 18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
மேலும் அவர் தெரிவித்ததாவது :
* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2005 இலிருந்து 8 சதவீதத்திற்கும் மேல் இருந்து வந்திருக்கிறது. தொடர்ந்து இனி வரும் வருடங்களிலும் வளர்ச்சி 8.8 சதவீதம் சராசரியாக இருக்கும் என்று நம்புவதாக தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகுத்தது உற்பத்தி துறை மற்றும் சேவை துறைதான். இனி வரும் வருடங்களில் உற்பத்தி துறை 9.4 சதவீதமும், சேவை துறை 10.8 சதவீதமும் வளர்ச்சி அடையும் என்று அவர் தெரிவித்தார்.
* மேலும் ஒவ்வொரு நாளும் 52 கிராமங்களுக்கு டெலிபோன் இணைப்பு கொடுக்கப்படுகிறது.
* கல்விக்காக ரூ.34,400 கோடி ஒதுக்கப்படுகிறது.இது 20 சதவீதம் அதிகம்.
* 16 மத்திய பல்கலைக்கழகமும், 3 ஐ.ஐ.டி யும் துவங்கப்படுகின்றன. மூன்று ஐ.ஐ.டி.க்கள் ஆந்திரா, பீகார், ராஜஸ்தானில் துவங்கப்படுகிறது.
* சுகாதாரத்திற்காக ரூ.16,530 கோடி ஒதுக்கப்படுகிறது.
* எஸ்.சி., எஸ்.டி.,மற்றும் ஓ.பி.சி.,களின் நல திட்டத்திற்காக ரூ.,966 கோடி ஒதுக்கப்படுகிறது.
* மாடல் ஸ்கூல்களுக்காக ரூ.650 கோடி ஒதுக்கப்படுகிறது. 6000 புதிய மாடல் ஸ்கூல்கள் துவங்கப்படுகின்றன.
* தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு ரூ.12,970 கோடி ஒதுக்கப்படுகிறது.
* தோட்டக்கலை துறைக்கு ரூ.1,100 கோடி ஒதுக்கப்படுகிறது.
* குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்படும் தொகையில் 24 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
* பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு ரூ.7,200 கோடி ஒதுக்கப்படுகிறது.
* 2008 - 09 ஆண்டின் விவசாய கடனுக்காக ரூ.2,80,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
* ராஷ்ட்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்திற்காக ரூ.2,80,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
* 53 சிறிய நீர்ப்பாசன திட்டம் நிறைவேற்றப்படும். நீர்ப்பாசன திட்டத்திற்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
* இந்திய எல்லை பகுதி மக்கள் வளர்ச்சிக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்படுகிறது.
* பள்ளி குழந்தைகளுக்கு பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் கொடுப்பதற்காக ரூ.200 கோடி ஒதுக்கப்படுகிறது.
* கிராம சுகாதார திட்டத்திற்காக ரூ.12,050 கோடி ஒதுக்கப்படுகிறது.
* சென்னையில் கடல்நீரை குடி நீரான ஆக்கும் திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கப்படுகிறது.
* 2009 ஏப்ரலுக்கு மேல் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்பவர்களுக்கு வரி கிடையாது.
* கார்பரேட் வருமான வரியில் மாற்றம் செய்யப்படவில்லை.
* நாட்டின் பாதுகாப்பிற்கு ரூ.1,05,600 கோடி ஒதுக்கப்படுகிறது.
* காஞ்சிபுரத்தில் ஐ.ஐ.ஐ.டி. என்று உயர் கல்வி நிலையம் அமைக்கப்படுகிறது.
* கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்காக ரூ.16,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
* போலியோ நோயை ஒழிப்பதற்கு ரூ.1,042 கோடி ஒதுக்கப்படுகிறது.
* சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்காக ரூ.13,100 கோடி ஒதுக்கப்படுகிறது.
* பில்டர் அல்லாத சிகரட்டுகளுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
* எய்ட்ஸ் நோய் தடுப்பு திட்டத்திற்காக ரூ.9,903 கோடி ஒதுக்கப்படுகிறது.
* இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் துவங்கப்படும் மருத்துவமனைகளுக்கு 5 வருடங்களுக்கு வரி கிடையாது.
* யுனஸ்கோ தேர்ந்தெடுத்துள்ள பாரம்பரிய இடங்களில் துவங்கப்படும் 2,3,4 ஸ்டார் ஹோட்டல்களுக்கு 5 வருடங்களுக்கு வரி கிடையாது.
* சிறிய கார்களுக்கான கலால் வரி 16 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
* மருந்து பொருட்களுக்கான கலால் வரியும் 14 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
Source : Dinamalar
Posted by Arul at Friday, February 29, 2008 0 comments
Labels: Dinamalar, DinamalarBiz, TamilNadu, இந்தியா, இந்தியா Budget
Sunday, February 24, 2008
Wednesday, February 13, 2008
அமெரிக்காவின் சிறந்த 15 பெண் உயர் அதிகாரிகளில் ஒருவர் இந்திய பெண்
சிலிக்கான் வேலி, அமெரிக்கா : அமெரிக்காவில் இருக்கும் கார்பரேட் அலுவலகங்களில் உயர் அதிகாரிகளாக பணியாற்றும் சிறந்த 15 பெண்களில், பத்மஸ்ரீ வாரியார் என்ற இந்திய பெண்ணும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த சிஸ்கோ சிஸ்டத்தில் சீப் டெக்னாலஜி ஆபிசராக ( சிடிஓ ) பணியாற்று கிறார். அவர்களது திறமையாலும் புதுப்புது யுத்திகளாலும், அவர்கள் சார்ந்த நிறுவனங்களை அவர்கள் எந்த அளவு முன்னேற்றுகிறார்கள் என்பதை வைத்து இந்த லிஸ்ட் சேகரிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பிரபல பிசினஸ் இதழ் ஒன்று இந்த லிஸ்டை தயார் செய்து வெளியிடுகிறது. அதில் முதல் 15 பெண் உயர் அதிகாரிகளில் பத்மஸ்ரீயும் ஒருவர். டிசம்பர் 2007ல் சிஸ்கோ சிஸ்டம் நிறுவனத்தில் சேர்ந்த இவர் இதற்கு முன் மோட்டரோலா நிறுவனத்தில் வைஸ் பிரசிடென்ட் மற்றும் சி இ ஓ வாக இருந்தவர். ஆந்திராவில் உள்ள விஜயவாடாவை சேர்ந்த பத்மஸ்ரீ வாரியார், டில்லி ஐ.ஐ.டி யில் கெமிக்கல் இஞ்சினியரிங்கில் இளநிலை பட்டம் பெற்ற பின் அமெரிக்க கார்னல் பல்கலைக்கழகத்தில் 2007 ம் ஆண்டில் எம்.எஸ்.பட்டம் பெற்றார். பின்னர் இஞ்சினியரிங்கில் டாக்டர் பட்டமும் பெற்றார். ஏற்கனவே பெப்சி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் இந்திய பெண்ணான இந்திரா நூயி, இந்தியாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது இன்னொரு இந்திய பெண்ணும் அமெரிக்க கார்பரேட் உலகத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
Posted by Arul at Wednesday, February 13, 2008 0 comments
Labels: Dinamalar, DinamalarBiz, TamilNadu, இந்தியா
இன்றைய பங்கு சந்தை : 341 புள்ளிகள் உயர்ந்து முடிந்தது
மும்பை : மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் ஆரம்பித்த நான்கு நிமிடத்திலேயே 225 புள்ளிகள் உயர்ந்து விட்டது. திங்கள் அன்று கடும் வீழ்ச்சியிலும் அதை தொடர்ந்து நேற்று சிறிது குறைந்தும் முடிந்த மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்த உடனேயே நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. காலை 11.00 மணிக்கெல்லாம் சென்செக்ஸ் 528.15 புள்ளிகளும், நிப்டி 145.90 புள்ளிகளும் உயர்ந்திருந்தது. பின்னர் அது கொஞ்சம் இறங்க துவங்கி, மாலை வர்த்த முடிவில் சென்செக்ஸ் 341.13 புள்ளிகள் ( 2.05 சதவீதம் ) உயர்ந்து 16,949.14 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 91.20 புள்ளிகள் ( 1.88 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 4,929.45 புள்ளிகளில் முடிவடைந்தது.
Posted by Arul at Wednesday, February 13, 2008 0 comments
Labels: Bombay Share Exchange, Dinamalar, DinamalarBiz, TamilNadu, இந்தியா
What you can study in England - An exhibition in Chennai
C[Q»õ¢vÀ GßÚ £iUP»õ®? ö\ßøÚ°À |hUQÓx PsPõm]
ö\ßøÚ :
C[Q»õ¢vÀ EÒÍ CÍ{ø» ©ØÖ® •x{ø» £mh¨ £i¨¦PÒ SÔzx ö\ßøÚ ©õnÁºPÒ öu›¢x öPõÒÁuØPõÚ, C[Q»õ¢x PÀÂU PsPõm] ÷|ØÖ xÁ[Q¯x.
¤›miè PÄß]À \õº¤À C[Q»õ¢vÀ EÒÍ E¯ºPÀ Áõ´¨¦PÒ SÔzx C¢v¯ ©õnÁºPÒ öu›¢x öPõÒÁuØPõP Bsk÷uõÖ® C[Q»õ¢x PÀ PsPõm] |hzu¨£kQÓx. ö\ßøÚ°À C[Q»õ¢x PÀ PsPõm] ÷|ØÖ xÁ[Q¯x. C[Q»õ¢vß 55US® ÷©Ø£mh PÀ {ÖÁÚ[PÒ P»¢x öPõshÚº. CUPÀ {ÖÁÚ[PÎß ¤µv{vPÒ, u[PÍx PÀ {ÖÁÚzvÀ EÒÍ CÍ{ø» ©ØÖ® •x{ø» £mh¨ £i¨¦PÒ SÔzx ö\ßøÚ ©õnÁºPÎß \¢÷uP[PÐUS ÂÍUP©ÎzuÚº. ÷©¾® C[Q»õ¢vÀ PÀ £°ÀÁuØPõÚ AÝ©v Âv•øÓPÒ ©ØÖ® ÷uøÁPÒ SÔzx® ©õnÁºPÐUS ÂÍUP[PÒ AÎUP¨£mhÚ. C[Q»õ¢x PÀ PsPõm], ö\ßøÚ ~[P®£õUPzvÀ EÒÍ uõä ÷Põµ©shÀ Kmh¼À CßÖ ©õø» 2 ©o •uÀ CµÄ 7 ©o Áøµ |hUQÓx. CUPsPõm]US AÝ©v C»Á\®.
Source : Dinamalar
Posted by Arul at Wednesday, February 13, 2008 0 comments
Friday, February 8, 2008
|v}º¨ £õ\Ú® ©ØÖ® }º ªß\õµ EØ£zv vÓøÚ AvP›US® ÷|õUQÀ,|õmi¾ÒÍ 14 |vPÒ ÷u]¯©¯©õUP¨£k®,GÚ ©zv¯ Aµ_ AÔÂzxÒÍx.
¤µu©º ©ß÷©õPß ][ uø»ø©°À, ÷|ØÖ ©zv¯ ÷P¤Úm Tmh® |h¢ux.CUTmhzvÀ |õmi¾ÒÍ 14 |vPÒ ÷u]¯ |vPÒ GÚ AÔ¨£x GÚ •iÄ ö\´¯¨£mhx.CUTmhzxUS ¤ß {¸£ºPÐUS ÷£mi¯Îzu,ö\´v JΣµ¨¦ xøÓ Aø©a\º ¤›¯µg\ß uõì•ßæ,""14 |vPøÍ ÷u]¯ |vPÒ GÚ AÔ¨£x GßÓ öPõÒøP •iøÁ ©zv¯ Aµ_ GkzxÒÍx.Cuߣi,C¢u |vPÎß £µõ©›¨¦,÷©®£õmk £oPÎÀ 90 \uÃu öuõøPø¯ ©zv¯ Aµ÷\ HØS®.{v¯ø©a\º ]u®£µ®, }º ÁÍzxøÓ Aø©a\º ø\¦wß ÷\õì ©ØÖ® vmh Pªåß xøn uø»Áº BQ÷¯õº CvÀ GÆÁõÖ {v²u AΨ£x Gߣx SÔzx •iöÁk¨£õºPÒ,''GßÓõº. |
Posted by Arul at Friday, February 08, 2008 0 comments
Saturday, January 26, 2008
Happy Republic Day
Posted by Arul at Saturday, January 26, 2008 0 comments
Labels: Dinamalar, India, january 26, Republic Day, TamilNadu, இந்தியா
Tuesday, January 22, 2008
4.5 லட்சம் லாரிகள் ஓடாது
Source : Dinamalar
Posted by Arul at Tuesday, January 22, 2008 0 comments
மலேசியாவில் தைப்பூசம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்படும்:-பிரதமர்
Source : Dinamalar
Posted by Arul at Tuesday, January 22, 2008 0 comments
Monday, January 21, 2008
கனடா முத்துமாரி அம்மன் கோயிலில் தைப்பூச கொண்டாட்டம்
கனடாவில் உள்ள முத்துமாரி அம்மன் கோயிலில் 22 ம் தேதி தைப்பூச கொண்டாட்டம் நடக்கவுள்ளது. இக்கோயிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் முன்கூட்டியே பக்தர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இதன்படி கடந்த 19 ம் தேதி சனி பிரதோஷம் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. 21 ம் தேதி பூர்ணிமா விரதம், சிறப்பு அபிஷேகம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22 ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 25 ம் தேதி சங்கடஹர சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது
Source : Dinamalar
Posted by Arul at Monday, January 21, 2008 0 comments
Friday, January 18, 2008
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; 50 வீரர்கள் காயம்
Posted by Arul at Friday, January 18, 2008 0 comments
நரி ஜல்லிக்கட்டு நடத்தி கிராமத்தில் பொங்கல் உற்சாகம்
Posted by Arul at Friday, January 18, 2008 0 comments
Labels: Dinamalar, Maatu Pongal, Pongal, TamilNadu, இந்தியா
Thursday, January 17, 2008
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; 50 வீரர்கள் காயம்
மதுரையில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 11.30 மணிக்கு துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட காளையர்கள் போட்டியில் பங்கேற்றனர். மாடு பிடிக்கும் வீரர்களுக்கு நீலநிற சீருடை, தொப்பி வழங்கப்பட்டது. போலீஸ் எஸ்.பி., அன்பு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் ஜவஹர் போட்டிகளை துவக்கி வைத்தார். பார்வையாளர்கள் மைதானத்தின் உட்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. ஒருசில மாடுகளைத் தவிர பெரும்பாலான மாடுகள் வீரர்களுக்கு போக்கு காட்டிவிட்டு எல்லையைத் தொட்டுச் சென்றன. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, கட்டில், பீரோக்கள் பரிசாக வழங்கப்பட்டன. மொத்தம் ஆறுமணி நேரம் நடந்த போட்டியில் 400 காளை மாடுகள் பங்கேற்றன. போட்டியில் 50 வீரர்கள் காயமடைந்தனர்.
Source : Dinamalar
Posted by Arul at Thursday, January 17, 2008 0 comments
Labels: Alanganallur, Dinamalar, Jallikattu, Maatu Pongal, Pongal, TamilNadu, இந்தியா
ஆப்பரிக்க போட்ஸ்வானாவில் உள்ள ஒரே இந்து கோயில்
ஆப்பரிக்க கண்டத்தில் போட்ஸ்வானாவில் கப்ரோனா என்ற ஒரே இந்து கோயில் மட்டுமே உள்ளது. இங்கு சிவன், ராமர், லட்சுமணனர் , நவக்கிரகம் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களும் உள்ளது என்பது முக்கியச்சிறப்பு. ஆப்ரிக்க கண்டத்தில் முக்கிய நகரங்களில் இந்துகோயில்கள் பல உள்ளன. ஆனால் போட்ஸ்வானாவில் உள்ள கப்ரோனா என்ற இந்து கோயில் மட்டுமே உள்ளது. இக்கோயிலை மக்கள் இந்துஹால் என்றே அழைக்கின்றனர். இப்பகுதி வாழ் இந்து மக்கள் குவிந்து தங்ள் இஷ்ட தெய்வங்களை வணங்கி வருகின்றனர். இங்கு நுழைவு வாயியில் முதல் பகுதியில் நவக்கிரக கோயில் உள்ளது. தொடர்ந்து பார்வதியுடன் சிவன், அருகில் கணேசர், முருகன் விக்கிரங்கள் உள்ளது. அடுத்து ராமர், லட்சுமணர், சீதாசன்னதி உள்ளது. இங்கு தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்திருக்கும். இங்கு மகாசிவராத்திரி, ராமநவமி, தசரா, தீபாவளி உள்ளிட்ட இந்துக்களின் முக்கிய திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. கடந்த 5 ம் தேதி பிரதோஷமும், 8 ம் தேதி குருபூஜையும், 14 ம் தேதி போகிப் பண்டிகையும், 14 ம் தேதி திருப்பாவை, திருவெம்பாவை நிறைவு நிகழ்ச்சியும், 15 ம் தேதி மகரசங்கராந்தியும் கொண்டாடப்பட்டது. நாள்தோறும் இங்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இக்கோயில் நிர்வாத்தினர் தெரிவித்துள்ளனர்.
Source : Dinamalar
Posted by Arul at Thursday, January 17, 2008 0 comments
Wednesday, January 16, 2008
மெல்போர்ன் சிவவிஷ்ணு கோயிலில் 1008 கலச பூஜை
ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகர் சிவவிஷ்ணு கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு 1008 கலச பூஜையும் , பொங்கல் திருவிழாவும் நடந்தது. ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் அருகே பிலிப்பே கடலுக்கு சற்று தொலைவில் பேட்ர்சின் ஆற்றுக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்து கலாச்சார முறைப்படி தத்ரூபமாக கட்டட கலை நுணுக்கத்துடன் 1. 5 மில்லியன் டாலர் செலவில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. விக்கோடரியா வாழ் இந்துக்கள் இக்கோயிலை நிறுவியுள்ளனர். இங்கு நாள்தோறும் காலை 7.30 முதல் 12. 05 வரையும், மாலையில் 4 மணி முதல் 9 மணி வரையும் நடை திறந்திருக்கும். புத்தாண்டை முன்னிட்டு மகாவிஷ்ணுக்கு 1008 கலச பூஜை நடத்தப்பட்டது. அந்நாளில் அன்னதானமும் நடந்தது. பொங்கலை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், மகேஸ்வர பூஜையும், உற்சவமும் நடந்தது. 16 ம் தேதி கானும் பொங்கலை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. வரும் 18ம் தேதி இக்கோயிலில் உள்ள சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கவுள்ளது. இக்கோயில் 17 ஆண்டுகளள்முன்னதாக நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Posted by Arul at Wednesday, January 16, 2008 0 comments
Labels: Dinamalar, Lord Visnu, melbourne, TamilNadu, temple, இந்தியா
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு துவங்கியது
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். தமிழர்களின் வீர விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சுப்ரீம் கோர்ட் நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகி்ன்றன. ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற பாலமேட்டில் இன்று காலை 10 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. இதையொட்டி பாலமேடு சுற்றுப்புற கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. இதுதவிர தென் மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கிறது.
Posted by Arul at Wednesday, January 16, 2008 0 comments
Labels: Alanganallur, Dinamalar, Jallikattu, Pongal, TamilNadu, இந்தியா
பழநி தைப்பூசம் : கொடியேற்றம்
பழநி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடியேற்றத்தை யொட்டி, பெரியநாயகியம்மன் கோவில் முத்துக்குமார சுவாமி சன்னதியில் மயூர யாகம் நடந்தது. கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் உலா வந்த பின் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் செய்து கொடி ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தில் 10 நாட்களுக்கு யாக சாலை பூஜை நடைபெறும்.
Posted by Arul at Wednesday, January 16, 2008 0 comments
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்
Posted by Arul at Wednesday, January 16, 2008 0 comments
இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்
Posted by Arul at Wednesday, January 16, 2008 0 comments
Labels: Dinamalar, Maatu Pongal, Pongal, TamilNadu, இந்தியா
Friday, January 11, 2008
http://www.chennai-madras.com/
Hi All,
I think the below site will be useful for somebody.
I came to know this site when I search for pin code for madippaakam
http://www.chennai-madras.com/
Cool ah...
Posted by Arul at Friday, January 11, 2008 0 comments
Saturday, January 5, 2008
பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ல் துவங்குகின்றன: மார்ச் 25ல் பத்தாம் வகுப்புக்கு ஆரம்பம்: அரசு தேர்வுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை:அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் நேற்று வெளியிட்ட பொதுத் தேர்வு அட்டவணை விவரங்கள்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை விவரங்களை, அரசு தேர்வுத்துறை நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அதன்படி, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 3ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 25ம் தேதியில் இருந்து ஏப்ரல் 10ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. உயர் கல்வியில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு விட்டதால், பிளஸ் 2 பொதுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களை வைத்தே உயர் கல்வியில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்களும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடியதாக விளங்குகின்றன. அதை மனதில் கொண்டு அரசு தேர்வுத்துறை, அட்டவணையை தயாரித்துள்ளது. அறிவியல் பிரிவு மற்றும் கணிதப் பிரிவு மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத் தேர்வுக்கும் இடைவெளி வரும் வகையில் அட்டவணையை உருவாக்கியுள்ளது. மொழித்தாள் தேர்வுகளுக்குப் பிறகு, மார்ச் 10ம் தேதி காலை இயற்பியல் தேர்வு நடக்கிறது. அதற்கு பிறகு, இரண்டு நாள் இடைவெளி தரப்பட்டுள்ளன. 13ம் தேதி வேதியியல் தேர்வும், ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு மைக்ரோ-பயாலஜி மற்றும் பயோ-கெமிஸ்ட்ரி தேர்வும் நடைபெறுகின்றன. மீண்டும் ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு 17ம் தேதி கணிதத் தேர்வும், விலங்கியல் தேர்வும் நடைபெறுகின்றன. அத்துடன் 20ம் தேதி உயிரியல் மற்றும் தாவரவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன. இப்படி முக்கிய பாடத் தேர்வுகளில், மாணவர்கள் கடைசி நேரத்தில் நல்ல முறையில் தயாராகும் வகையில் போதிய இடைவெளி விட்டு சிறப்பான முறையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே, அறிவியல் மற்றும் கணிதப் பிரிவு மாணவர்கள், ஒரு தேர்வை முடித்ததும் அடுத்த தேர்வுக்கு தயாராவதற்கு கால அவகாசம் தரப்பட்டுள்ளது. அதேபோல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் போதிய இடைவெளியுடன் தேர்வு அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால் தான், அறிவியல் மற்றும் கணித `குரூப்'கள் கிடைக்கும். இல்லையென்றால், கலைப்பாடப் பிரிவுகளில் சேர வேண்டிய நிலை ஏற்படும். எனவே, அவர்களுடைய நலனையும் கருத்தில் கொண்டு மொழிப்பாடத் தேர்வுகளை தவிர்த்து, இதர பாடங்களுக்கு போதிய இடைவெளி தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செய்முறை தேர்வு எப்போது?: பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகள் ஆரம்பமாகும். இந்த தேர்வை பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்தில் ஒவ்வொரு தேதிகளில் நடைபெறும். மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பல கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். எனினும், குறிப்பிட்ட தேதியில் துவங்கி, முடிக்குமாறு தேர்வுத்துறை அறிவுறுத்தும். செய்முறைத் தேர்வு, பிப்ரவரி முதல் வாரத்தில் துவங்கும் என்றாலும், சரியான தேதியை இன்னும் தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. செய்முறைத் தேர்வு முடிந்து இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு எழுத்துத் தேர்வு துவங்கி விடும். பிளஸ் 2 தேர்வு மாணவிகளே அதிகம்!: பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்து இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில், `மொத்தம் ஐந்து லட்சத்து 95 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். இதில், மாணவர்கள் இரண்டு லட்சத்து 83 ஆயிரம் பேர்; மாணவிகள் மூன்று லட்சத்து 12 ஆயிரம் பேர்' என்றார். மாணவர்களை விட மாணவிகள் 29 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பொறுத்தவரை எட்டு லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த சரியான புள்ளி விவரம் ஓரிரு நாளில் தெரிய வரும். தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு விட்டதால், தேர்வுகளை நடத்துவதற்கான வேலைகளிலும் தேர்வுத் துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஆங்கிலோ இந்திய தேர்வை பொறுத்தவரை, மெட்ரிகுலேஷன் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையே பெரும்பாலும் பொருந்துகிறது. ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு மார்ச் 25ம் தேதி மொழித் தாள் தேர்வு நடைபெறும். இந்த மாணவர்களுக்கு மொழி இரண்டாம் தாள் தேர்வு கிடையாது. எனவே, 25ம் தேதிக்குப் பிறகு 27ம் தேதி ஆங்கில முதற்தாள் தேர்வு நடைபெறும். மற்ற தேர்வுகள் அனைத்தும், மெட்ரிகுலேஷன் அட்டவணையே ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Posted by Arul at Saturday, January 05, 2008 0 comments
Labels: +2, 10th, Dinamalar, HSC, Secondary School Examinations, SSLC, TamilNadu, இந்தியா
Thursday, January 3, 2008
மாருதி கார் விற்பனை 6.88 சதவீதம் உயர்வு
மும்பை: இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகியின் உள்நாட்டு கார் விற்பனை, 2007 டிசம்பரில் மாதத்தில் 6.88 சதவீதம் உயர்ந்துள்ளது. 2006-டிசம்பரில் 54,640 கார்களை விற்பனை செய்த மாருதி, 2007-டிசம்பரில் 58,401 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 6.88 சதவீதம் ... For full article read http://www.dinamalarbiz.com/
Posted by Arul at Thursday, January 03, 2008 0 comments
இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 18 சதவீதம் சரிவு
2007-ல் இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 18 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதாவது இதற்கு முந்தைய ஆண்டில் 219 மில்லியன் கிலோவாக இருந்த ஏற்றுமதி, தற்போது 180 மில்லியன் கிலோவுக்கு குறைந்து விட்டது. ஈராக் மற்றும் பாகிஸ்தானில் பிரச்சினையால் ஏற்றுமதி குறைந்து விட்டதாக இந்திய தேயிலை அமைப்பு தெரிவித்தது.... For the Full News Read http://www.dinamalarbiz.com/
Posted by Arul at Thursday, January 03, 2008 0 comments
Labels: Bisuness, Dinamalar, DinamalarBiz, Export, Iraq, Pakisthan, TamilNadu, Tea, இந்தியா
ஒரே நாளில் ஆயிரம் பஸ்கள் இன்று இயக்கம் : சென்னையில் மட்டும் 500 பஸ்கள் கூடுகிறது
சென்னை: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் ஒரே நாளில் முதன்முறையாக ஆயிரம் பஸ்கள், முதல்வர் கருணாநிதியால் இன்று துவக்கி வைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.
எக்ஸ்பிரசில் சொகுசு மற்றும் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.கடந்த மாதம் போக்குவரத்து துறை சார்பில் பயணிகள் மற்றும் பொது மக்களுடனான சந்திப்புக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சென்னை வாசிகள், அதிக பஸ்களை இயக்கும்படி கோரிக்கை விடுத்தனர். சென்னை மாநகர் பயணிகளின் போக்குவரத்து கோரிக்கைகளை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. பயணிகளின் கோரிக்கையை உயர்மட்டக் குழு பரிசீலித்து, பல்வேறு ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கியது. அதன் அடிப்படையில் ஆயிரம் புதிய பஸ்களை இயக்க தமிழக அரசு போக்குவரத்து கழகம் முடிவெடுத்தது. சென்னையில் 500 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டது. 83 புதிய வழித்தடங்களை உருவாக்கி அந்த வழித்தடங்களில் புதிய பஸ்களை இயக்கவும், ஏற்கனவே உள்ள வழித் தடங்களில் 42 பஸ்களை கூடுதலாக இயக்கவும் முடிவு செய்துள்ளது. மற்ற பஸ்கள் அனைத்து வழித் தடங்களிலும் பகிர்ந்தளிக்கப்படுகிது. எக்ஸ்பிரஸ் வழித்தடங்களில் இயக்கப்படும் 500 பஸ்களில் கூடுதல் சொகுசு மற்றும் குளிர்சாதன வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக, சென்னையில் 100 தொடர் பஸ்கள், 300க்கும் அதிகமான தாழ்தள சொகுசு மற்றும் 10 குளிர்சாதன வால்வோ பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த சட்டசபைக் கூட்டத் தொடரின் போது சென்னையின் இலக்காக ஜனவரி 2008க்குள் மூன்றாயிரம் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். இன்று துவங்குவதில் சென்னை மாநகருக்கான 500 புதிய பஸ்களை சேர்த்து சென்னை மாநகரில் பஸ்களின் எண்ணிக்கை மூன்றாயிரத்து 60 ஆக உயர்ந்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இன்று ஆயிரம் புதிய பஸ்களை முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார். துவக்க விழாவில் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உத்தரவினையும் வழங்குகிறார். உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் இந்த விழாவிற்குத் தலைமையேற்கிறார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மா.ராமசுப்ரமணியன் கூறுகையில், "சென்னையில் புதிய வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களை சேர்த்து தற்போதைய எண்ணிக்கை மூன்றாயிரத்து 60. சென்னை மாநகரின் எல்லை 40 கி.மீட்டரில் இருந்து 50 கி.மீ., தூரமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 83 புதிய வழித்தடங்கள் சென்னையில் றிமுகப்படுத்தப்படுகிறது. மாநகர பஸ் பயணிகளின் கோரிக்கையை ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பிரச்னைகள் ஆய்வு செய்து விரைவில் தீர்க்க இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும்," என்றார்.
Posted by Arul at Thursday, January 03, 2008 0 comments
சென்னை ஐகோர்ட் தமிழக அரசிடம் கேள்வி * தூக்குதண்டனையை நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளதா?
சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை நிறுத்தி வைக்க கோரி கைதிகளின் வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ததால் தண்டனையை நிறுத்தி வைக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா என அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது
கடந்த 2000ம் ஆண்டில் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் தமிழகம் முழுவதும் கலவரம் வெடித்தது. தர்மபுரியில் நடந்த கலவரத்தில் அ.தி.மு.க.,வினர், கோவைவிவசாய பல்கலைக்கழக மாணவிகள் சுற்றுலா சென்ற பஸ்சை தீயிட்டு கொளுத்தினர். இச்சம்பவத்தில் மாணவிகள் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா மூவரும் எரிந்து பலியாயினர். இதுதொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது.
வழக்கு விசாரணையின் முடிவில் தர்மபுரியைச் சேர்ந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பிறகு சேலம் கூடுதல் அமர்வு நீதிபதி மாணிக்கம் டிச. 20ம் தேதி மூவரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தார். அதை ஐகோர்ட் உறுதிப்படுத்தி விட்டது. ஜன.10ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து மூவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
அப்பீல் மனுவை பெற்ற சுப்ரீம் கோர்ட் பதிவாளர் அலுவலகம், தூக்கு தண்டனை கைதிகள் அப்பீல் மனு தாக்கல் செய்தனர்' என்ற தகவலை சென்னை ஐகோர்ட், தமிழக சட்டத்துறை செயலர், சேலம் நீதிமன்றம், கோவை மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு எக்ஸ்பிரஸ் டெலிகிராம் மூலம் தெரிவித்துள்ளது. . தூக்கு தண்டனை கைதிகளின் வக்கீல் மனோஜ்பாண்டியன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென தெரிவித்தார்.
சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை, தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை ஐகோர்ட்டுக்கு அதிகாரம் உள்ளதா எனவும், நாளைக்குள் பதில் சொல்ல வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அப்பாவி மாணவிகளின் உயிரோடு விளையாடிய மூன்று பேரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா... பதில் தமிழக அரசின் கையில் தான் உள்ளது.
Posted by Arul at Thursday, January 03, 2008 0 comments
Labels: Bus, Bus burning case, Coimbatore, Dharmapuri, Dinamalar, TamilNadu, TamilNadu Agricultural University, இந்தியா
Wednesday, January 2, 2008
Google Logo for 2008
Try this,
Go to www.google.com classic home page.
Click on the Google logo above the search text box [I copied the same here below. You can click on the below image also]
Click on the image.
This will give search result for “January 1 tcp/ip”
You will know the TCP/IP protocol and its history.
Posted by Arul at Wednesday, January 02, 2008 0 comments
Tuesday, January 1, 2008
தேசிய கைப்பந்து: இறுதிப்போட்டியில் தமிழகம்
புதுடில்லி : 56-வது தேசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் நடந்த அரையிறுதியில், சென்ற வருடம் 2-ம் இடம் பிடித்த கேரள அணியை 25-22, 25-22, 25-23 என்ற நேர்செட்களில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. மற்றொரு அரையிறுதியில் ஹரியானா தன்னை எதிர்த்து ஆடிய சர்வீசஸ் அணியை வென்றதால், தமிழகத்துடன் பைனலில் மோதவுள்ளது
Posted by Arul at Tuesday, January 01, 2008 0 comments
நெல் வயலில் நீர் குமிழிகள் : புவனகிரி அருகே பரபரப்பு
புவனகிரி: நெல் வயலில் திடீரென நீர் குமிழிகள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அடுத்த இடையன்பால்சொரி ஊராட்சி தலைவர் கருணாநிதிக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன் சேற்றில் ஒரு இடத்தில் மட்டும் நீர் குமிழிகள் ஏற்பட்டன. நேற்று காலை மீண்டும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நீர்குமிழிகள் தோன்றியது. வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் நீர் குமிழிகளைப் பார்த்து பீதியடைந்தனர். வேலை செய்ய மறுத்துவிட்டனர். இந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நீர் குமிழிகள் தோன்றுவதைப் பார்த்தனர். நிலத்தை பராமரிக்கும் வரதராஜன் கூறுகையில், `இது போன்ற நீர் குமிழிகள் ஏற்பட்டால் பூகம்பத்திற்கு அறிகுறி என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். நிலத்தில் திடீரென ஏற்பட்ட நீர் குமிழிகள் அதிகாரிகள் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.' என்றார்.
Posted by Arul at Tuesday, January 01, 2008 0 comments
பிள்ளையார்பட்டியில் அலைமோதிய பக்தர்கள்
திருப்புத்தூர்: புத்தாண்டை யொட்டி பிள்ளையார்பட்டியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர். சிவகங்கை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் திரண்டனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு புத்தாண்டு வழிபாடு துவங்கியது. கற்பக விநாயகர், தங்க கவசத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். உற்சவர், வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருந்து, விநாயகரை தரிசனம் செய்தனர்.
Posted by Arul at Tuesday, January 01, 2008 0 comments
Labels: Dinamalar, God, India, Pillayarpatti, TamilNadu, இந்தியா