நாமக்கல்: நாமக்கல் வட்டார வளமையம் சார்பில் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் விஸ்வநாதன் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஊர்வலத்தில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. அப்போது 6 முதல் 14 வயது வரையுள்ள மாணவ, மாணவியரை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நன்றி : தினமலர்
முழுச்செய்தி
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, June 4, 2010
பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
Posted by
Arul
at
Friday, June 04, 2010
0
comments
Labels: அனைவருக்கும் கல்வி, தினமலர், நாமக்கல், பள்ளி
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 உயரும் : இன்னும் மூன்று நாளில் அறிவிக்க அரசு திட்டம்
புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.50 வரை உயரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 7ம் தேதி இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட கிரீத் பரேக் கமிட்டி, "பெட்ரோல், டீசல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை கைவிட வேண்டும். சமையல் எரிவாயு விலையை கடுமையாக உயர்த்த வேண்டும். அதேபோல், கெரசின் விலையையும் உயர்த்த வேண்டும். எரிபொருள் மானியத்தை கணிசமாக குறைக்க வேண்டும்' என, பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய அதிகார குழு வரும் 7ம் தேதி கூடுகிறது.
நன்றி : தினமலர் முழுச்செய்தி
Posted by
Arul
at
Friday, June 04, 2010
0
comments

