நேற்று காலமான குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயபால் உடல் அடக்கம் இன்று கன்னியாகுமரி மாவட்டம் பெருவிளையில் நடைபெறுகிறது. ஜெயபால் சொந்த ஊர் நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை கிராமம். 1955 மே 19-ம் தேதி பிறந்தார். பி.எஸ்சி. பட்டதாரி. மனைவி புஷ்பம். மகன்கள் சிவபிரபு, சிவபிரசாத். மகள் சிவப்பிரியா. மகன் சிவபிரபு நாகர்கோவில் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். இளமை காலம் முதலே காங்கிரசில் இணைந்து செயல்பட்டார். 1986 முதல் 91 வரை பெருவிளை பஞ்சாயத்து தலைவராக பணியாற்றினார். 1996 முதல் 2001 வரை மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக பணியாற்றினார். 2006 சட்டசபை தேர்தலில் குளச்சல் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது உடல் இன்று மாலை நான்கு மணிக்கு பெருவிளையில் நடைபெறுகிறது
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, July 26, 2010
ஜெயபால் எம்.எல்.ஏ. உடல் இன்று அடக்கம்
Posted by Arul at Monday, July 26, 2010
Labels: கன்னியாகுமரி, காங்கிரஸ், குளச்சல், நாகர்கோவில், பஞ்சாயத்து, பெருவிளை
No comments:
Post a Comment