ராஜபாளையம் : வீட்டிற்கு வாணம் தோண்டும் போது, 1000 ஆண்டுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவருக்கு சொந்தமான நிலத்தில், வீடு கட்டுவதற்காக, நேற்று, வாணம் தோண்டப்பட்டது. அப்போது, இரண்டே கால் அடி உயரம் கொண்ட முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது. அதனுள், மண்டை ஓடு, கத்தி, கல், எலும்புகள் இருந்தன. முதுமக்கள் தாழி மற்றும் அதிலிருந்த பொருட்கள் தாசில்தார் காளிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டது. வரலாற்றுத்துறை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "முந்தைய காலத்தில் நோய் வாய்ப்பட்டு, செயலாற்றும் தன்மையின்றி இறுதி காலத்தில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களை, பெரிய மண் பானைக்குள்(முதுமக்கள் தாழி) உட்கார வைத்து, மண்ணில் புதைத்துவிடும் பழக்கம் இருந்தது. ராஜபாளையத்தில் கண்டறியப்பட்ட தாழியில் கத்தி இருந்ததால், அதில் இறந்தவர் ஊர் தலைவராக இருக்கலாம். இது 1000 ஆண்டுக்கு முந்தையதாக இருக்கக்கூடும்' என்றார்.
Source : Dinamalar
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Tuesday, December 23, 2008
1000 ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
Posted by Arul at Tuesday, December 23, 2008
No comments:
Post a Comment