Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 22, 2008

4.5 லட்சம் லாரிகள் ஓடாது

பெங்களூரு: கர்நாடகாவில் துவங்கியுள்ள லாரி ஸ்டிரைக் காரணமாக, பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்தும் கர்நாடக அரசு உத்தரவை எதிர்த்து, காலவரையற்ற லாரி ஸ்டிரைக் நேற்று நள்ளிரவு முதல் துவங்கியது. ஸ்டிரைக் பற்றி விவாதிப்பதற்காக, கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சங்க கூட்டம், சாம்ராஜ்பேட்டையில் சங்க தலைவர் சண்முகப்பா தலைமையில் நடந்தது. வேக கட்டுப்பாடு கருவி பொருத்தினால், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் லாரிகளின் எண்ணிக்கை குறையும். டீசலும் அதிகம் தேவைப்படும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. கர்நாடக மாநில லாரி உரிமையாளர் சங்க தலைவர் சண்முகப்பா கூறும் போது, லாரிகளுக்கு இந்த உத்தரவை அமல்படுத்தும் அரசு, ஏன் தனியார் வாகனங்களுக்கு அமல்படுத்தவில்லை என்று கேட்டார். அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டும் ஸ்டிரைக் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஸ்டிரைக்கில், கர்நாடகா முழுவதும் 4.5 லட்சம் வாகனங்கள் பங்கேற்கின்றன. இதில், 2.75 லட்சம் சரக்கு லாரிகள், 10 ஆயிரம் டாக்சிகள் அடங்கும்.

Source : Dinamalar

No comments: