பழநி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.கொடியேற்றத்தை யொட்டி, பெரியநாயகியம்மன் கோவில் முத்துக்குமார சுவாமி சன்னதியில் மயூர யாகம் நடந்தது. கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் உலா வந்த பின் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் செய்து கொடி ஏற்றப்பட்டது. கோவில் வளாகத்தில் 10 நாட்களுக்கு யாக சாலை பூஜை நடைபெறும்.
No comments:
Post a Comment