வாழப்பாடி அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் கிராம மக்கள், நரியை வைத்து ஜல்லிக்கட்டு நடத்தி, பொங்கல் விழாவை கோலாகலமாகக் கொண்டாடினர்.நரி முகத்தில் விழித்து காரியத்தை துவக்கினால் பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிராம மக்களிடம் உள்ளது. தை மாதத்தில் வங்கா நரியை ஓட விட்டு பிடிக்கும் வினோத ஜல்லிக்கட்டு, வாழப்பாடி சுற்று வட்டார கிராமங்களில் நடத்தப்படுகிறது. சேலம் வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் நரி பிடிக்க, மேள தாளத்துடன் காட்டுக்குச் சென்றனர். வலையில் வங்கா நரி சிக்கியது. தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வங்கா நரியை கொண்டு வந்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பள்ளி மைதானத்தில் நரியின் வயிற்றில் கயிறு கட்டி ஓட விட்டு ஜல்லிக்கட்டு நடத்தி, ஆரவாரத்துடன் பொங்கல் கொண்டாடினர்.வங்கா நரி தேடி, வனப்பகுதியில் ஏராளமான கிராமங்களைச் சேர்ந்தோர் முற்றுகையிட்டுள்ளனர். நரி பிடிபட்டதும் நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.
Source : Dinamalar
No comments:
Post a Comment