Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 1, 2008

பிள்ளையார்பட்டியில் அலைமோதிய பக்தர்கள்

திருப்புத்தூர்: புத்தாண்டை யொட்டி பிள்ளையார்பட்டியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து கற்பக விநாயகரை தரிசனம் செய்தனர். சிவகங்கை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் திரண்டனர். அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு புத்தாண்டு வழிபாடு துவங்கியது. கற்பக விநாயகர், தங்க கவசத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். உற்சவர், வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக பக்தர்கள் காத்திருந்து, விநாயகரை தரிசனம் செய்தனர்.

No comments: