Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 1, 2008

நெல் வயலில் நீர் குமிழிகள் : புவனகிரி அருகே பரபரப்பு

புவனகிரி: நெல் வயலில் திடீரென நீர் குமிழிகள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் அடுத்த இடையன்பால்சொரி ஊராட்சி தலைவர் கருணாநிதிக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு கடந்த ஐந்து நாட்களுக்கு முன் சேற்றில் ஒரு இடத்தில் மட்டும் நீர் குமிழிகள் ஏற்பட்டன. நேற்று காலை மீண்டும் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நீர்குமிழிகள் தோன்றியது. வேலை செய்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் நீர் குமிழிகளைப் பார்த்து பீதியடைந்தனர். வேலை செய்ய மறுத்துவிட்டனர். இந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நீர் குமிழிகள் தோன்றுவதைப் பார்த்தனர். நிலத்தை பராமரிக்கும் வரதராஜன் கூறுகையில், `இது போன்ற நீர் குமிழிகள் ஏற்பட்டால் பூகம்பத்திற்கு அறிகுறி என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். நிலத்தில் திடீரென ஏற்பட்ட நீர் குமிழிகள் அதிகாரிகள் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.' என்றார்.

No comments: