மதுரையில் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 11.30 மணிக்கு துவங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட காளையர்கள் போட்டியில் பங்கேற்றனர். மாடு பிடிக்கும் வீரர்களுக்கு நீலநிற சீருடை, தொப்பி வழங்கப்பட்டது. போலீஸ் எஸ்.பி., அன்பு தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கலெக்டர் ஜவஹர் போட்டிகளை துவக்கி வைத்தார். பார்வையாளர்கள் மைதானத்தின் உட்பகுதியில் அனுமதிக்கப்படவில்லை. ஒருசில மாடுகளைத் தவிர பெரும்பாலான மாடுகள் வீரர்களுக்கு போக்கு காட்டிவிட்டு எல்லையைத் தொட்டுச் சென்றன. மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு தங்கக்காசு, கட்டில், பீரோக்கள் பரிசாக வழங்கப்பட்டன. மொத்தம் ஆறுமணி நேரம் நடந்த போட்டியில் 400 காளை மாடுகள் பங்கேற்றன. போட்டியில் 50 வீரர்கள் காயமடைந்தனர்.
Source : Dinamalar
No comments:
Post a Comment