ஆஸ்திரேலியா தொடர்ந்து 15 வது டெஸ்ட்போட்டியில் 377 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
மெல்போர்ன் : முதல் டெஸ்ட் போட்டி 4 வது நாளன்று ஆஸ்திரேலியா 337 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா தனதுதொடர்ச்சியான 15 வது டெஸ்ட் போட்டி வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 343 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 196 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 247 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் பெற்று இந்திய அணிக்கு 598 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 74 ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. மெல்போர்ன் சோகம் : மெல்போர்ன் மைதானத்தில் எந்த ஒரு அணியும் சேஸ் செய்து 332 ரன்களுக்கு மேல் எடுத்து வெற்றி பெற்றதில்லை. இப்படி நிகழ்ந்து 80 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்தியா ஒரு போதும் மெல்போர்ன் மைதானத்தில் வெற்றி பெற்றதில்லை. இந்தியா 1985 ல் இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 445 ரன்கள் எடுத்துள்ளது.இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் 9 டெஸ்ட்களில் விளையாடி 2 ல் ஜெயித்து , 6 ல் தோல்வியடைந்து, 1 டெஸ்ட்டை டிரா செய்துள்ளது. மெல்போர்ன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 337 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Saturday, December 29, 2007
ஆஸ்திரேலியா தொடர்ந்து 15 வது டெஸ்ட்போட்டியில் 377 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Posted by Arul at Saturday, December 29, 2007
No comments:
Post a Comment