Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Monday, December 24, 2007

அடுத்தாண்டின் இறுதியில் செயல்பட தொடங்கும் டெக்ஸ்டைல் பார்க்

மதுரை: நாடு முழுவதும் டெக்ஸ்டைல் பாரக் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 25டெக்ஸ்டைல் பார்க்குகள் அமைக்க முன்வந்துள்ளது. இதன் படி மதுரை வாடிப்பட்டி தாலுகா அருகே அடுத்தாண்டு முதல் ஜவுளி பூங்கா செயல்படவுள்ளதாக மதுரை நூற்பாளர்கள் அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் மதுரையில் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், இங்கு ஒருங்கிணைந்த ஜவுளி பார்க் ரூ.500 கோடி முதலீட்டில் 106 ஏக்கரில் அமைகிறது. இதற்கு அடிப்படை தேவை வசதிக்கு மட்டும் ரூ.92 கோடி செலவு செய்யப்படவுள்ளது. இதில் 6 மெகாவாட் மின்சாரம் அதன் சொந்த செலவில் உருவாக்கப்படும். டெக்ஸ்டைல் பார்க்கினால் 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். அதனை சுற்றியுள்ள மக்களுக்கு வேலை குறித்த பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

Source : http://www.dinamalarbiz.com/

No comments: