மதுரை : சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில் இருந்து பம்பைக்கு தினமும் இரவு 10 மணிக்கு சிறப்பு பஸ் புறப்படுகிறது. பயணிகள் வருகையை பொறுத்து பம்பையில் இருந்து மதுரைக்கு பஸ் புறப்படும். மதுரை - பம்பை இடையே டிக்கெட் ஒன்றுக்கு ரூ.250 கட்டணம். முன்பதிவுக்கு கூடுதலாக ரூ.15 செலுத்த வேண்டும். பக்தர்கள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. விவரங்களுக்கு 0452 - 2585 838 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Source : Dinamalar
No comments:
Post a Comment