Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, December 18, 2007

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

சென்‌னை : வங்ககடலில் ஏற்பட்டுளள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கையிலிருந்து கோல்கட்டா வரை உள்ளதால் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், மணிக்கு 48 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் பலத்த மயை பெய்து வருகிறது. இதனால் தஞ்ச‌ை , திருவாரூர்,நாகை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூரில் பலத்த மழை பெய்து வருகிறது.நாகையில் பலத்த மழை பெய்து வருவதால் மீனவர்கள் இரண்டாவது நாளாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதே போல் மதுரை சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

 

Source  :   Dinamalar

 

No comments: