திண்டுக்கல்-பொள்ளாச்சி மீட்டர்கேஜ் பாதை: மார்ச் 1ம் தேதி மூட முடிவு: தினமலர்: "திண்டுக்கல்-பொள்ளாச்சி மீட்டர்கேஜ் பாதை: மார்ச் 1ம் தேதி மூட முடிவு
ஜனவரி 08,2009,00:00 IST
திண்டுக்கல்: திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை, அகலப் பாதையாக மாற்றும் பணிக்காக,வழித்தடத்தை மூடுவது, பழநி தைப்பூச விழாவிற்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி முதல் ரயில் போக்குவரத்தை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தென் மாவட்டங்களில் மதுரை-போடி, திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையே மட்டும் மீட்டர்கேஜ் பாதையில் ரயில்கள் இயங்கி வருகின்றன. திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையே அகல ரயில் பாதை அமைக்க, ஆறு மாதத்திற்கு முன்னர் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின. திண்டுக்கலில் துணை முதன்மை பொறியாளர் அலுவலகம் திறக்கப்பட்டு, துணை அலுவலகமாக பழநியில் செயற்பொறியாளர் அலுவலகமும் செயல்படுகிறது. முதல் கட்டமாக திண்டுக்கல்-பொள்ளாச்சியிடையே உள்ள சண்முக நதி, அமராவதி உள்ளிட்ட ஐந்து பெரிய பாலங்கள், சிறு பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை ஆகிய ஸ்டேஷன்களில் நடை மேடை அமைக்கும் பணி, அடிப்படை வசதிகளை அதிகரித்து ஸ்டேஷன் விரிவாக்கப் பணிகள் நடக்கின்றன.
ஆரம்ப கட்டப் பணிகள் முடிந்த நிலையில், ஜனவரி 1 முதல் ரயில்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. பிப்ரவரி முதல் வாரத்தில் பழநியில் தைப்பூச விழா நடைபெறுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு வசதியாக இந்த வழித்தடத்தை மூடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிப்ரவரியில் தைப்பூச விழா முடிந்த பிறகு, மார்ச் 1ம் தேதி முதல் திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையே ரயில் இயக்குவதை நிறுத்தி, பணிகளை துரிதப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 8, 2009
திண்டுக்கல்-பொள்ளாச்சி மீட்டர்கேஜ் பாதை: மார்ச் 1ம் தேதி மூட முடிவு: தினமலர்
Posted by Arul at Thursday, January 08, 2009
No comments:
Post a Comment