ஐ.என்.எஸ்., விராட் வயது 50 ஆகிறது: தினமலர்: "ஐ.என்.எஸ்., விராட் வயது 50 ஆகிறது
ஜனவரி 05,2009,00:00 IST
புதுடில்லி : இந்திய விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ்., விராட், 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைத் தொடர்ந்து, அதை விமரிசையாக கொண்டாட இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியாவின் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐ.என்.எஸ்., விராட், முன்பு பிரிட்டிஷ் கடற்படையில் இருந்தது. 1959ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரிட்டிஷ் கடற்படையில் தனது பணியை துவக்கியது.
1987ல் இந்த கப்பலை இந்திய கடற்படை வாங்கியது. 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய கடற்படையில் சேவையாற்றியுள்ளது. தற்போது இந்த கப்பல் கொச்சியில் உள்ள கப்பல் பழுது பார்க்கும் மையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு கப்பலை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. ஐ.என்.எஸ்., விராட் 50வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை தொடர்ந்து, அதை விமரிசையாக கொண்டாட இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது. இந்த கொண்டாட்டத்தில் பிரிட்டிஷ் கடற்படையினரும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, January 5, 2009
ஐ.என்.எஸ்., விராட் வயது 50 ஆகிறது: தினமலர்
Posted by Arul at Monday, January 05, 2009
No comments:
Post a Comment