இந்தியாவின் கொள்கையை மொரீஷியஸ் பின்பற்றும்: தினமலர்: "இந்தியாவின் கொள்கையை மொரீஷியஸ் பின்பற்றும்
ஜனவரி 15,2009,00:00 IST
அருப்புக்கோட்டை:இலங்கை தமிழர் பிரச்னையில் இந்தியாவின் கொள்கை தான் எங்களுடையதும் என அருப்புக்கோட்டை வந்த மொரீஷயஸ் நாட்டின் துணை ஜனாதிபதி ஏ.வி. செட்டியார் கூறினார்.மொரீஷியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி ஏ.வி. செட்டியார் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது தங்கை அமராவதி வீட்டிற்கு வந்திருந்தபோது நிருபர்களிடம் கூறியதாவது:
பல துறைகளில் என்னுடைய சேவையை பாராட்டி இந்திய அரசு விருது வழங்கியுள்ளது. ஜூன் மாதம் மொரீஷியசில் நடைபெறவிருக்கும் உலக தமிழ் மாநாட்டிற்கு அமைச்சர் ஸ்டாலினை தலைமை ஏற்குமாறு அழைக்க வந்துள்ளேன். முதல்வர் கருணாநிதியையும் சந்தித்து அழைப்பு விடுவேன். அனைத்து நாடுகளில் உள்ள தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
இலங்கை தமிழர் பிரச்னையில் இந்திய நாட்டின் கொள்கை தான் எங்களுடையதும். மொரீசியஷில் எதிர்கட்சியினர் தான் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை தமிழர்களின் நிலை குறித்து மனதளவில் வேதனைப்படுவது மட்டும் தான் தற்போது எங்களால் செய்ய முடியும் என்றார்.அருப்புக்கோட்டை வந்துள்ள துணை ஜனாதிபதிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 15, 2009
இந்தியாவின் கொள்கையை மொரீஷியஸ் பின்பற்றும்: தினமலர்
Posted by Arul at Thursday, January 15, 2009
No comments:
Post a Comment