Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, January 2, 2009

Kanyakumari District News, Tamil Nadu : Dinamalar News Paper Daily :கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் : : தினமலர்

Kanyakumari District News, Tamil Nadu : Dinamalar News Paper Daily :கன்னியாகுமரி மாவட்ட செய்திகள் : : தினமலர்: "சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் கொடியேற்றம்

சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 9ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.


சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் மார்கழி பெருந்திருவிழா நேற்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சர்மா ஆகம விதிப்படியான பூஜைகளை செய்தார். பிலிப் நம்பூதிரி கொடியேற்றினார். விழாவில் தேவஸம் போர்டு இணை ஆணையர் பாஸ்கரன், அறங்காவலர்கள் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மூன்றாம் நாள் விழாவன்று இரவு கோட்டாறு விநாயகர், மருங்கூர் மற்றும் குமாரகோவில் சுப்பிரமணியசுவாமி ஆகியோர் தாய் தந்தையான சிவன் பார்வதியை காணவரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. ஐந்தாம் நாள் விழாவன்று காலையில் நடுத்தெரு வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பு பஞ்சமூர்த்தி தரிசனமும் தொடர்ந்து கருட தரிசனமும் நடக்கிறது.


ஏழாம் நாள் விழாவன்று இரவு கைலாசபர்வத வாகனத்தில் சுவாமி பவனியும் தொடர்ந்து வாணவேடிக்கையும், எட்டாம் நாள் திருவிழாவன்று அதிகாலையில் நடராஜபெருமாளின் ஆனந்த தாண்டவ காட்சியும் நடக்கிறது.


ஒன்பதாம் நாள் விழாவன்று காலையில் தேரோட்டம் நடக்கிறது. முதலில் விநாயகர் தேரும், சுவாமி தேரும் அதன் பின்னால் அம்மன் தேரும் நான்கு ரதவீதிகள் வழியாக பக்தர்களால் இழுத்து வரப்பட்டு அதன் நிலையில் சேர்க்கப்படுகிறது. அன்று இரவு 12 மணிக்கு சப்தாவர்ணக் காட்சியும், மறுநாள் இரவு ஆறாட்டும் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை தேவஸம் போர்டு நிர்வாகத்தினரும், கோயில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்."

No comments: