தமிழகத்தில் மேலும் ஒரு நாள் மழை பெய்ய வாய்ப்பு: தினமலர்: "தமிழகத்தில் மேலும் ஒரு நாள் மழை பெய்ய வாய்ப்பு
ஜனவரி 08,2009,00:00 IST
சென்னை: 'புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி வடகிழக்கு பருவ மழை சீசன் முடிவடைந்து, பனிப்பொழிவு துவங்கி விட்டது. வட மாநிலங்களில் கடும் குளிருக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இந்நிலையில், சென்னை நகரில் நேற்று காலை முதலே ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால், பனிப்பொழிவு குறைந்தது.
தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கை கடற்கரைக்கும், தமிழக கடற்கரைக்கும் இடையே புதிதாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 4 செ.மீ., மழை பெய்தது. பரங்கிப்பேட்டையில் 2, காரைக்காலில் 1 செ.மீ., மழை பெய்தது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 8, 2009
தமிழகத்தில் மேலும் ஒரு நாள் மழை பெய்ய வாய்ப்பு: தினமலர்
Posted by Arul at Thursday, January 08, 2009
No comments:
Post a Comment