Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 13, 2009

மஞ்சள்கொத்து அறுவடை தீவிரம் : தென்மாவட்ட வியாபாரிகள் முகாம்: தினமலர்

மஞ்சள்கொத்து அறுவடை தீவிரம் : தென்மாவட்ட வியாபாரிகள் முகாம்: தினமலர்: "மஞ்சள்கொத்து அறுவடை தீவிரம் : தென்மாவட்ட வியாபாரிகள் முகாம்

ஜனவரி 13,2009,00:00 IST

பரமக்குடி : பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் மஞ்சள் கொத்துக்களை வாங்கி செல்ல பரமக்குடியில் தென் மாவட்ட வியாபாரிகள் முகாமிட்டுள்ளனர்.இங்குள்ள மஞ்சள் பட்டணத்தில் பயிரிடப்படும் மஞ்சள்கொத்துகள் பொங்கல் பண்டிகைக்காக ராமநாதபுரம் , மதுரை, சிவகங்கை, விருதுநகர் , புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு பருவம் தவறிய மழையால் இதன் விவசாயம் பாதிக்கப்பட்டது. மழைநீர் தேங்கி செடிகளும் அழுகின.


இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டபோதும் எஞ்சியவற்றை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் தீவிரம் காட்டினர். ஒரு வழியாக அறுவடையை நெருங்கிய நேரத்தில் விவசாயிகளுக்கு லாரி ஸ்டிரைக் பெருத்த இடியாக விழுந்தது.இருப்பினும் இதற்கு கிராக்கி இருப்பதால் தென்மாவட்ட வியாபாரிகள் இங்கு முகாமிட்டு வாங்கி செல்கின்றனர். லாரிகளுக்கு பதில் 'மினிடோர்' லாரிகளை பயன்படுத்தி ஏற்றுமதி செய்யப் பட்டாலும் அதிக அளவில் மஞ்சள் கொத்துகள் தேக்கம் அடைந்து வருகின்றன. தற்போது 1.50 ரூபாய் வரை வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. இது கடந்த ஆண்டை விட 50 காசு அதிகமாகும். தேவை அதிகம் இருப்பதால் பொங்கல் வரை அறுவடை நடைபெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்."

No comments: