பழநியில் பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருப்பு: தினமலர்: "பழநியில் பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருப்பு
ஜனவரி 12,2009,00:00 IST
பழநி : பழநி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.ரோப்கார், 'விஞ்ச்'சில் செல்ல 4 மணி நேரம் காத்திருந்தனர்.வரும் பிப்.,8 ல் தைப்பூசம் ஆகும். இருப்பினும் கடந்த மார்கழி 1 முதல் பாதயாத்திரைபக்தர்கள் பழநி க்கு வர ஆரம்பித்து விட்டனர். நேற்று பாதயாத்திரை, ஐயப்ப,கேரள பக்தர்கள் என வழக்கத்திற்கு மாறாக அதிக கூட்டம் காணப் பட்டது. பொது தரிசன வழி, சிறப்பு தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் தரிசனத்திற் காக காத்திருந்தனர்.மலை கோயிலுக்கு ரோப்கார், 'விஞ்ச்'சில் செல்ல 4 மணி நேரம் காத்திருந்தனர். மலைக்கோயிலில் தரிசன, கால பூஜை டிக்கெட்கள், பஞ்சாமிர்தம் அதிகமாக விற்பனை ஆகி இருந்தது. பூங்காரோடு, அய்யம்புள்ளி ரோடு, அருட்ஜோதி வீதி, கிரிவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிறப்பு பஸ் கள் இயக்கப் பட்ட போதிலும், வெளியூர்களுக்கு பஸ்சில் செல்ல பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, January 12, 2009
பழநியில் பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருப்பு: தினமலர்
Posted by
Arul
at
Monday, January 12, 2009


No comments:
Post a Comment