டில்லியில் மூடுபனி விமானங்கள் தாமதம்: தினமலர்: "டில்லியில் மூடுபனி விமானங்கள் தாமதம்
ஜனவரி 07,2009,00:00 IST
புதுடில்லி:டில்லியில், ஒரு நாள் இடைவெளிக்கு பின் மீண்டும் நேற்று மூடு பனி
காணப்பட்டதால், 50 விமான சேவைகள் தாமதமாகின, 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 40 ரயில்கள் தாமதமாக இயங்கின.இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
டில்லியில் நிலவும் மூடுபனி காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத் தின் ஓடு தளப்பாதையில் போதிய வெளிச்சமின்மையால், விமான போக்குவரத்து நேற்று தடைபட்டது.கோவை, பெங்களூரு, மும்பை, சிம்லா, லக்னோ, அவுரங்காபாத், ஜெய்ப்பூர் மற்றும் சென்னைக்கு, நேற்று காலை செல்ல வேண்டிய விமான சேவையில் பெரும்பாலானவை ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாக புறப்பட்டன. 12 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.இவ்வாறு விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
ஒரு வாரமாக நிலவிய கடும் பனிமூட்டத்திற்கு பின் நேற்று முன்தினம் காணப்பட்ட தெளிவான வானிலையால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். பெரும்பாலான விமானங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயங்கின. ஆனால், மீண்டும் நேற்று மூடுபனி காணப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.இந்த மூடுபனியால் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது குறித்து வடக்கு ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், 'மூடுபனி காரணமாக 40க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயங்கின. டில்லியில் இருந்து நேற்று காலை புறப்பட வேண்டிய பல ரயில்கள், போதிய வெளிச்சமின்மையால் நேரம் மாற்றியமைக்கப் பட்டன' என்றனர்.இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்திலும் கடுங்குளிர் நிலவி வருகிறது. இதனால், பலர் உயிரிழந்தனர்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Wednesday, January 7, 2009
டில்லியில் மூடுபனி விமானங்கள் தாமதம்: தினமலர்
Posted by Arul at Wednesday, January 07, 2009
No comments:
Post a Comment