Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Friday, January 9, 2009

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "ரூ.40 கோடி தீப்பெட்டி, டைரி, காலண்டர்கள் தேக்கம்

ஜனவரி 09,2009,00:21
சிவகாசி: லாரிகள் வேலை நிறுத்தத்தால், சிவகாசியில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான காலண்டர், டைரிகளும், சாத்தூர், கோவில் பட்டி பகுதிகளில் லட்சக்கணக்கான தீப்பெட்டி பண்டல்களும் தேக்கமடைந்துள்ளன. சிவகாசியில் தயாராகும் காலண்டர், டைரிகள், இந்தியா முழுவதும் சப்ளை செய்யப்படுகின்றன. கடைசி நேர ஆர்டர் களாக வரும் காலண்டர், டைரிகள், ஜனவரி 15 வரை அனுப்பப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு நிலவிய மின்வெட்டு, பேப்பர், போர்டு தட்டுப்பாட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டன. இதனால், டிசம்பரில் சிவகாசியில் 24 மணி நேரமும் அச்சகங்கள் இயங்கின. ஆனாலும், உரிய நாட்களில் வேலையை முடித்து சப்ளை செய்ய இயலவில்லை. ஜன., 15ம் தேதிக்குள் சப்ளை செய்து விடுவதாகக் கூறி அச்சகத்தினர் பணிகளை துரிதப்படுத்தினர். ஏற்கனவே மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது லாரிகள் வேலை நிறுத்தத்தினால் சிவகாசியில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான டைரி, காலண்டர்கள் முடங்கியுள்ளன. தயாரானவைகளை விரைவாக அனுப்பாவிட்டால், மேலும் நஷ்டம் ஏற்படும் என மாஸ்டர் பிரின்டர் அசோசியேஷன் தலைவர் ரமேஷ்குமார் தெரிவித்தார். சிலர், ரயில்கள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை அனுப்ப முயன்று வருகின்றனர். ரெகுலர் சர்வீஸ் பாதிப்பு: சிவகாசியில் இருந்து மதுரைக்கு தினமும் 20 லாரிகள் சரக்கு ஏற்றி, இறக்கி வருகின்றன. லாரிகள் போராட்டத்தால், லாரி புக்கிங் ஆபீஸ்களில் புக்கிங் செய்வதை நிறுத்தி விட்டனர். மளிகை பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மளிகை பொருட்களின் விலை மூட்டைக்கு 200 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

தீப்பெட்டி தொழில் பாதிப்பு: சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான தீப்பெட்டி பண்டல்கள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது."

No comments: