பண்ருட்டி பகுதியில் காலிபிளவர் வரத்து அதிகரிப்பு: விலை வீழ்ச்சி: தினமலர்: "பண்ருட்டி பகுதியில் காலிபிளவர் வரத்து அதிகரிப்பு: விலை வீழ்ச்சி
ஜனவரி 15,2009,00:00 IST
பண்ருட்டி : பண்ருட்டி பகுதியில் காலிபிளவர், முட்டை கோஸ் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையம், திருத்துறையூர், கள்ளிப்பட்டு, குச்சிப்பாளையம் கிராமங்களில் 100 ஏக்கர் பரப்பளவில் காலிபிளவர், முட்டைகோஸ் பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக கார்த்திகை, மார்கழி மாதத்தில் விதை கன்றுகளை நடவு செய்து உரம், ஊட்ட சத்துக்கள் வைத்து பயிர் செய்வது வழக்கம்.இந்தாண்டு அண்ணாகிராம ஒன்றிய தோட்டக்கலைதுறை அலுவலர்கள் சார்பில், காலிபிளவர் போன்ற பயிர் செய்ய முறையாக விதைகள், கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகளுக்கு தோட்டக்கலைதுறை ஒத்துழைப்பு இல்லாததால், சாகுபடி பரப்பு 300 ஏக்கரில் இருந்து 100 ஏக்கராக குறைந்தது.இதில் அனுபவம் பெற்ற சிறுவிவசாயிகள் மட்டுமே ஓசூர் பண்ணையில் விதை கன்றுகள் வாங்கி பயிர் செய்தனர்.
கடந்த மாதம் பெய்த கனமழையில் காலிபிளவர், முட்டைகோஸ் பாதிப்படைந்தது. பல செடிகள் மழையில் மூழ்கி அழுகியது.கடந்த ஒரு வாரமாக கிராமங்களில் இருந்து பண்ருட்டி மார்க் கெட்டிற்கு காலிபிளவர் தினந்தோறும் 10 மூடைகள் வர துவங்கியது. பெங்களூரூ காலிப்பிளவர் 10 ரூபாய் முதல் 15 வரை விற்றது. உள்ளூர் காலிபிளவர் வருகையால் இரு காலிபிளவர் 15 ரூபாய் என விலை குறைந்தது. இன்னும் 15 நாட்களில் முட்டை கோஸ் அறுவடைக்கு வர துவங்கும்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 15, 2009
பண்ருட்டி பகுதியில் காலிபிளவர் வரத்து அதிகரிப்பு: விலை வீழ்ச்சி: தினமலர்
Posted by Arul at Thursday, January 15, 2009
No comments:
Post a Comment