ஒரே நாளில் 31 ஆயிரம் கிலோ பழநி பஞ்சாமிர்தம் விற்பனை: தினமலர்: "ஒரே நாளில் 31 ஆயிரம் கிலோ பழநி பஞ்சாமிர்தம் விற்பனை
ஜனவரி 06,2009,00:00 IST
பழநி : பழநி கோவிலில் ஒரே நாளில் 31 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் விற்பனையானது. இது பழநி கோவில் வரலாற்றில் முதன் முறை. கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பழநி கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தால் தானியங்கி மெஷின் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலைக்கோவில், வின்ச், ரோப்கார் ஸ்டேஷன், மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஞாயிறன்று 31 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இவ்வளவு அதிகமான பஞ்சாமிர்தம் விற்பனையானது, பழநி கோவில் வரலாற்றில் இதுவே முதன்முறை. பஞ்சாமிர்த விற்பனை மூலம் 18.5 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. மேற்கண்ட இரண்டு தினங்களில் தரிசன, அபிஷேக, அர்ச்சனை, காலபூஜை, தங்கரதப்புறப்பாடு, வின்ச், ரோப்கார், பஞ்சாமிர்த விற்பனை ஆகிய இனங்களில் இருந்து வசூல் 50 லட்சமாகும் என பழநி கோவில் இணை ஆணையர் ராஜமாணிக்கம் தெரிவித்தார்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Tuesday, January 6, 2009
ஒரே நாளில் 31 ஆயிரம் கிலோ பழநி பஞ்சாமிர்தம் விற்பனை: தினமலர்
Posted by Arul at Tuesday, January 06, 2009
No comments:
Post a Comment