Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

மூன்று குழந்தை பெற்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் : சட்ட கமிஷன் பரிந்துரையால் சர்ச்சை: தினமலர்

மூன்று குழந்தை பெற்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் : சட்ட கமிஷன் பரிந்துரையால் சர்ச்சை: தினமலர்: "மூன்று குழந்தை பெற்றால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் : சட்ட கமிஷன் பரிந்துரையால் சர்ச்சை

ஜனவரி 15,2009,00:00 IST

திருவனந்தபுரம் : 'இரண்டுக்கும் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு ரூ. பத்தாயிரம் அபராதம் விதிக்க வேண்டும்'என, கேரள அரசு சார்பில் நியமிக்கப்பட்ட சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு சார்பில், சட்ட கமிஷன் நியமிக்கப்பட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கிருஷ்ண அய்யர் இந்த கமிஷனுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.


இந்த கமிஷன் இம் மாதம் 24ம் தேதி தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.சட்ட கமிஷன் பரிந்துரைகள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. 'இரண்டுக்கும் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வோருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். இவர்களுக்கு இலவச கல்வி திட்டம் தொடர்பான சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும்' என்பது உட்பட பல பரிந்துரைகள் இதில் உள்ளன.இந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின், அதை அமல்படுத்துவதா இல்லையா என்பதை மாநில அரசு முடிவு செய்யும். ஆனால், அதற்குள் இது தொடர்பாக, கேரளாவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மத அமைப்புகள், இந்த பரிந்துரைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன."

No comments: