வால்பாறையில் பூத்துக்குலுங்கும் 'சோயின் சோபியா' பூக்கள்: தினமலர்: "வால்பாறையில் பூத்துக்குலுங்கும் 'சோயின் சோபியா' பூக்கள்
ஜனவரி 12,2009,00:00 IST
வால்பாறை : வால்பாறை மலைப்பகுதியில் பரவலாக பூத்துக் குலுங்கும் 'சோயின் சோபியா' பூக்கள், சுற்றுலாப் பயணிகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. வால்பாறையில் அடிக்கடி மாறிவரும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப பல்வேறு வகையான பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அக்டோபரில் மஞ்சள் நிற சூரிய காந்தி பூவையும், டிசம்பரில் வெள்ளை நிறத்து 'டிசம்பர் பூ'க்களையும் காணமுடியும். தவிர, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களும் பல்வேறு பகுதிகளில் பூத்துக் குலுங்குகின்றன. கடந்த ஒரு மாதமாக, வால்பாறையைச் சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் 'சோயின் சோபியா' என்ற வகையைச் சேர்ந்த சிகப்பு நிறப் பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்குகின்றன. இந்தப் பூவுக்கு நறுமணம் கிடையாது. ஆனால், காண்போரை ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டுச் செல்ல தூண்டுகின்றன; இந்தப் பூக்கள் சுற்றுலாப் பயணிகளின் மனதை சுண்டி இழுக்கின்றன."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Monday, January 12, 2009
வால்பாறையில் பூத்துக்குலுங்கும் 'சோயின் சோபியா' பூக்கள்: தினமலர்
Posted by Arul at Monday, January 12, 2009
No comments:
Post a Comment