கோவையில் 4ம் தேதி நாணயங்கள் கருத்தரங்கு: தினமலர்: "கோவையில் 4ம் தேதி நாணயங்கள் கருத்தரங்கு
ஜனவரி 02,2009,00:00 IST
கோவை : கோவையில், வரும் 4ம் தேதி நாணயங்கள், பணத்தாள்கள், தபால் தலைகள் சேகரிப்பாளர்களின் மாபெரும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. மாநில அளவில் நாணயங்கள், பணத்தாள்கள், தபால் தலைகள், போர் பதக்கங்கள், பன்னாட்டு பழங்கால உலோக பட்டன்கள், பழங்கால கிரயப் பத்திரங்கள், ஓவியம், புத்தகம், கடிகாரம், பேனாக்கள் மற்றும் கைவினை கலைப்பொருட்கள், அரிய பொருட்களைச் சேகரிப்பவர்களுக்காக அதிகமான உறுப்பினர்களுடன் கோவை மாவட்ட நாணயவியல் கழகம், கோவை அஞ்சலியல் கழகம் ஆகிய அமைப்புகள் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இது, வரும் 4ம் தேதி ஞாயிறு காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை, ராம் நகர் சபர்பன் பள்ளியில் நாணயம், பணத்தாள், தபால் தலை சேகரிப்பாளர்களின் மாபெரும் கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் நாணயம், தபால் தலை மாற்றம், விற்பனை போன்றவை நடைபெறும். டீலர் ஸ்டால்களும் அமைக்கப்படுகின்றன.
இக்கருத்தரங்கில், 'பண்டைய நாணயங்கள்' எனும் தலைப்பில் பேராசிரியர் திருஞானசம்பந்தம், 'பதினான்காம் நூற்றாண்டு முதல் யூரோ பணத்தாள்கள் வரை' எனும் தலைப்பில் சி.பி.பழனிச்சாமி, 'அந்த நாள் முதல் இந்த நாள் வரை தபால் தலைகள், அரிய பணத்தாள்கள்' எனும் தலைப்பில் நித்தியானந்தம் ஆகியோர் உரையாற்றுகின்றனர்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, January 2, 2009
கோவையில் 4ம் தேதி நாணயங்கள் கருத்தரங்கு: தினமலர்
Posted by Arul at Friday, January 02, 2009
No comments:
Post a Comment