சபரிமலை வருமானம் ரூ.100 கோடியை கடந்தது : தினமலர்: "சபரிமலை வருமானம் ரூ.100 கோடியை கடந்தது
ஜனவரி 15,2009,00:00 IST
சபரிமலை : சபரிமலையில் நடப்பு மண்டல,மகரவிளக்கு சீசனில் மொத்த வருமானம் 100 கோடி ரூபாயை கடந்தது. கடந்த ஆண்டு நவ.,15ம் தேதி மண்டல சீசன் துவங்கியது. மொத்தம் 41 நாட்கள் பூஜைகள் நடைபெற்ற இந்த காலத்தில் மொத்தம் 71 கோடியே 95 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இந்த தொகையுடன் அன்னதான நன்கொடையாக 67.28 லட்சம் ரூபாய் கிடைத்தது. மகரவிளக்குகாக நடை திறக்கப்ட்டு 14 நாட்கள் கடந்த நிலையில் மொத்த வருமானம் 30 கோடியை கடந்தது. இதன் மூலம் முதன்முறையாக சபரிமலை வருமானம் மண்டல, மகரவிளக்கு சீசனில் நூறு கோடி ரூபாயை கடந்தது. அரவணை விற்பனை முதலிடத்திலும், காணிக்கை இரண்டாம் இடத்திலும் உள்ளது. அபிஷேக டிக்கெட் விற்பனை மூலம் 34 லட்சம் ரூபாயும், அபிஷேக நெய் விற்பனை மூலம் 56 லட்சம் ரூபாயும் கிடைத்துள்ளது"
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 15, 2009
சபரிமலை வருமானம் ரூ.100 கோடியை கடந்தது : தினமலர்
Posted by Arul at Thursday, January 15, 2009
No comments:
Post a Comment