Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 6, 2009

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "டேங்கர் ஸ்டிரைக் வாபஸ் ஆச்சு... ஆனா, இல்லே

ஜனவரி 06,2009,00:30
நாமக்கல்: டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் ஐந்து நாளுக்கு பின் முடிவு வந்தது. என்றாலும், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் ஸ்டிரைக்கிற்கு, காஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் ஆதரவு அளித்துள்ளதால், வரும் நாட்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத் தில், மொத்தம் நான்காயிரம் லாரிகள் இயக்கப்படுகின்றன. சென்னை, மங்களூர், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டலிங் நிலையங்களுக்கு காஸ் எடுத்து வரும் பணியில், ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயக்கப்படுகின்றன. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்துடன் டேங்கர் லாரிகளுக்கான மூன்றாண்டு ஒப்பந்த காலம் நிறைவு பெற்றது. புது ஒப்பந்தப் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கும்படி ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. புது ஒப்பந்தப்படி கி.மீ.,/டன்னுக்கு வாடகை ரூ. 2.95 வழங்கவேண்டும் என டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதை ஆயில் நிறுவனங்கள் ஏற்க மறுத்ததால், சென்ற மாதம் 31ம் தேதி நள்ளிரவு முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை முடிவுக்கு கொண்டு வர, காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரை, ஆயில் நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தன. ஆயில் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தை, நேற்று சென்னையில் நடந்தது. கடந்த 2002-2005ம் ஆண்டு ஒப்பந்தப்படி கி.மீ.,/டன்னுக்கு ரூ. 2.02ம், மங்களூர் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் இயக்குவதற்கு ரூ. 2.02லிருந்து 10 சதவீதமும், இடைக்கால நிவாரணமாக வாடகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர். இடைக்கால நிவாரணமாக, சாதாரண வழித்தடத்தில் டேங்கர் லாரிகள் இயக்குவதற்கு ரூ. 2, மங்களூர் மலைப்பாதையில் இயக்க ரூ. 2.06 மற்றும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு டேங்கர் லாரிகளை இயக்க, அந்த வாடகையில் இருந்து 25 சதவீதம் கூடுதலாக வழங்குவதாகவும் ஆயில் நிறுவனங்கள் உறுதியளித்தன. இதை ஏற்றுக் கொண்டு, காஸ் டேங்கர் உரிமையாளர்கள் சங்கத்தினர், வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க செயலர் கார்த்திக் கூறுகையில், 'ஆயில் நிறுவனங்கள் டேங்கர் லாரிகளை இயக்குவதற்கு இடைக் கால நிவாரணமாக இரண்டு ரூபாயும், மலைப்பாதையில் இயக்க ரூ. 2. 06ம் வழங்குவதாக தெரிவித்துள்ளன. இதை ஏற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டோம். அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத் திற்கு தார்மீக ஆதரவு அளித் துள்ளோம். எனவே, டேங்கர் லாரிகளில் காஸ் நிரப்பும் பணி மட்டும் நடைபெறும். டேங்கர் லாரிகள் இயக்கப்பட மாட்டாது' என்றார். டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தப் போராட்டம் ஐந்து நாட் களுக்கு பின் முடிவுக்கு வந்தாலும், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. டேங்கர் லாரிகள் இயக்கப்படாது எனக் கூறியுள்ளதால், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது."

No comments: