பயங்கரவாதத்தை தடுக்க இலவச எஸ்.எம்.எஸ்., சேவை: தினமலர்: "பயங்கரவாதத்தை தடுக்க இலவச எஸ்.எம்.எஸ்., சேவை
ஜனவரி 08,2009,00:00 IST
ஐதராபாத்: பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், பொதுமக்களை எச்சரிக்க, இலவச எஸ்.எம்.எஸ்., சேவையை துவக்கி உள்ளனர் ஐதராபாத் போலீசார்.பயங்கரவாதம் குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் அவர்களுக்கு உடனடியாக மொபைல் போன்கள் மூலம் எஸ்.எம்.எஸ்., அனுப்ப ஐதராபாத் போலீசார் திட்டமிட்டனர். இது தொடர்பாக மொபைல் போன் ஆபரேட்டர்களுடன் பேச்சு நடத்தினர்.
சி.எம்.டி.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்தில் செயல்படும் அனைத்து மொபைல் போன் நிறுவனங்களும், தங்களது சந்ததாதாரர்களுக்கு, பயங்கரவாதம் தொடர்பான எச்சரிக்கை செய்திகளை, மொபைல் போனில் டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் அனுப்ப கொள்கை அளவில் சம்மதம் தெரிவித்துள்ளன.விரைவில் இது அமல்படுத்தப்பட உள்ளது. ஐதராபாத்தில் பயங்கரவாதம் தொடர்பாக எந்த சந்தேகம் எழுந்தாலும், அதை உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்க ஏற்கனவே, வியாபாரிகள், வர்த்தகர்கள், சமூக நல அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளனர்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 8, 2009
பயங்கரவாதத்தை தடுக்க இலவச எஸ்.எம்.எஸ்., சேவை: தினமலர்
Posted by Arul at Thursday, January 08, 2009
No comments:
Post a Comment