வெளி மாநில தமிழர்களுக்கு கரும்பு அனுப்புவதில் சிக்கல்: தினமலர்: "வெளி மாநில தமிழர்களுக்கு கரும்பு அனுப்புவதில் சிக்கல்
ஜனவரி 09,2009,00:00 IST
நடுவீரப்பட்டு: லாரி ஸ்டிரைக்கால் பொங்கல் பண்டிகைக்கு கரும்புகளை வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டு, பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, பட்டிக்குப்பம், ஆராய்ச்சிக்குப்பம் பகுதிகளில்150 ஏக்கரில் பன்னீர் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்புகளை வரும் 14ம் தேதி பொங்கல் பூஜையின்போது வீடுகளில் வைத்து பொதுமக்கள் வழிபடுவர். தமிழகம் மட்டுமில்லாமல் குஜராத், மும்பை, பெங்களூரு, புதுச்சேரி போன்ற மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களும், பொங்கல் விழாவின்போது பன்னீர் கரும்பு வாங்கி படையல் செய்கின்றனர். பண்ருட்டி பகுதியில் இருந்து ஆண்டுதோறும் வெளி மாநிலங்களுக்கு பன்னீர் கரும்பு சப்ளை செய்யப்படுகிறது.
இதற்காக முன் கூட்டியே விவசாயிகளிடம் முன் பணம் கொடுத்துள்ள வியாபாரிகள், லாரி ஸ்டிரைக் காரணமாக கரும்புகளை கொள்முதல் செய்து அனுப்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். லாரி ஸ்டிரைக் முடிவுக்கு வந்தாலும், கரும்புகளை மும்பை, குஜராத் மாநிலங்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன் அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, January 9, 2009
வெளி மாநில தமிழர்களுக்கு கரும்பு அனுப்புவதில் சிக்கல்: தினமலர்
Posted by Arul at Friday, January 09, 2009
No comments:
Post a Comment