லாரி ஸ்டிரைக்: வெறிச்சோடிய மார்க்கெட்: தினமலர்: "லாரி ஸ்டிரைக்: வெறிச்சோடிய மார்க்கெட்
ஜனவரி 08,2009,00:00 IST
ஒட்டன்சத்திரம்: லாரிகள் ஸ்டிரைக்கில் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் லாரி உரிமையாளர்கள் சங்கமும் கலந்து கொண்டதால் மார்க்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் தொடர்கிறது. கடந்த 2 நாட்களாக இதில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் லாரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று திடீரென்று ஸ்டிரைக்கில் கலந்து கொள்வதாக அறிவித்தது. இதனால் நேற்று மார்க்கெட்டிற்கு காய்களை ஏற்றிக் கொண்டு லாரிகள், மினிலாரிகள் வரவில்லை. இதனால் காய்கறி மார்க்கெட்டிற்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது போல் வெறிச்சோடி காணப்பட்டது.
மேலும் காய்களை கொண்டு வரவேண்டாம் என்று விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டதால் நேற்று விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வருவதை தவிர்த்து விட்டனர்.இதனால் மார்க்கெட்டில் காய்கறிகள் தேக்கம் ஏதுமில்லை. இது குறித்து கமிஷன் கடை உரிமையாளர் நலச் சங்க செயலாளர் ஆறுமுகம் கூறுகையில், லாரிகள் ஸ்டிரைக் காரணமாக காய்கறி வரத்து இல்லை என்றார்."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 8, 2009
லாரி ஸ்டிரைக்: வெறிச்சோடிய மார்க்கெட்: தினமலர்
Posted by
Arul
at
Thursday, January 08, 2009


No comments:
Post a Comment