Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

மீனாட்சி கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை : தினமலர்

மீனாட்சி கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை : தினமலர்: "மீனாட்சி கோயிலில் கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை

ஜனவரி 15,2009,00:00 IST

மதுரை : தை மாத பிறப்பையொட்டி மதுரை மீனாட்சி கோயிலில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான கல் யானைக்கு கரும்பு கொடுக்கும் லீலை நேற்று நடந்தது.ஒருசமயம் சித்தர் வேடத்தில் இருந்த சிவபெருமானுக்கும், பாண்டிய மன்னருக்கும் கல் உட்பட அனைத்திலும் ஜீவன் உண்டா, இல்லையா என்பது குறித்து விவாதம் நடந்தது.


அருகில் இருந்த கல் யானையை சுட்டிக்காட்டி 'இந்த யானை கரும்பு சாப்பிடுமா' என்று பாண்டிய மன்னர் ஏளனம் செய்தார். சித்தர் கூறியபடி ஒரு கட்டு கரும்புகளை மன்னர் எடுத்துக் கொடுக்க, கல் யானை துதிக்கையால் வாங்கி உண்டது. நேற்று மாலை 6.30 மணியளவில் கோயில் சித்தர் சன்னதி அருகேயுள்ள கல் யானைக்கு சுவாமி சுந்தரேஸ்வரர் முன்பு கரும்பு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் 16 கால் மண்டபத்தில் கோயில் யானை பார்வதிக்கு கரும்பு வழங்கப்பட்டது.


வைரக்கீரிடம் : மீனாட்சி அம்மனுக்கு தை மாதப் பிறப்பு, தை அமாவாசை, சித்திரை முதல் நாள், தீபாவளி அன்று வைரக்கீரிடமும், தங்க பாவாடையும் அணிவிப்பது வழக்கம். நேற்று காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டது. அபிஷேகத்திற்கு பிறகு காலை 10.30 மணிக்கு கிரீடம் எடுத்து வைக்கப்பட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு அணிவிக்கப் பட்டது. சுவாமி சுந்தரேஸ்வரருக்கும் வைர நெற்றிப் பட்டை சாத்தப்பட்டது."

No comments: