தினமலர்: "பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஸ்டிரைக் வாபஸ்
ஜனவரி 09,2009,19:18 IST
புதுடில்லி : பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நடத்திய ஸ்டிரைக் இன்று மாலை முழுவதுமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் ஸ்டிரைக் வாபஸ் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா, ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, எண்ணெய் சுத்திகரிப்பு உடனடியாக துவங்கும் என தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் நாளை முதல் பெட்ரோலிய பொருட்கள் நிலைமை சீராகும் என தெரிகிறது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Friday, January 9, 2009
தினமலர்
Posted by Arul at Friday, January 09, 2009
No comments:
Post a Comment