Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Thursday, January 15, 2009

தமிழக சிறைகளில் அருங்காட்சியம் திறப்பு: தினமலர்

தமிழக சிறைகளில் அருங்காட்சியம் திறப்பு: தினமலர்: "தமிழக சிறைகளில் அருங்காட்சியம் திறப்பு

ஜனவரி 15,2009,00:00 IST

மதுரை : தமிழக சிறைகளில் 15 ஆண்டுகளாக கைதிகள் செய்த, கற்ற நல்ல விஷயங்களை மற்ற கைதிகளும் அறியும் வகையில் அருங் காட்சியகம் திறக்கப் பட்டுள்ளது.சென்னை, மதுரை உட்பட 9 மத்திய சிறைகள், 114 கிளை சிறைகள், 2 பெண் சிறைகள், 6 சிறப்பு கிளைச் சிறைகள், ஒரு திறந்தவெளிச் சிறை உள்ளன. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


இவர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி படிப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிக்க வாய்ப்பு அளிக்கபடுகிறது. இதுதவிர யோகா போன்ற சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.கடந்த 15 ஆண்டுகளாக கைதிகள் செய்த நல்ல விஷயங்கள், தயாரித்த பொருட்கள், அவர்களை மேம்படுத்திய நிகழ்வுகளின் போட்டோக்களை சேகரித்து மற்ற கைதிகளின் பார்வைக்கு வைக்க சிறைத்துறை டி.ஜி.பி., நட்ராஜ் உத்தரவிட்டார்.


இதன்படி நேற்று மதுரை உட்பட மத்திய சிறைகளில் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. மற்றவர்களும் பார்க்கும் வகையில் பார்வையாளர் பகுதிக்கு அருங்காட்சியகம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது."

No comments: