Google Search


தமிழ்நாட்டில் இன்று

FeedBurner FeedCount of தமிழ்நாட்டில் இன்று

Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email

Tuesday, January 6, 2009

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo

::: Business ::: Business News,Finance News, World Business, India Stock News, Indian stock market, India investments, Indian Industry, Sensex, Nifty, BSE, NSE, India Business, India Economy, India, share market, Corporate Result, Finance News from the Business Standard,Global Crisis,Global Melt Down, citi group ceo: "பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு; டெபிட் கார்டு

ஜனவரி 06,2009,00:27
மும்பை: பள்ளி மாணவர்களுக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு ஆரம்பித்துக் கொடுத்து, அவர்களுக்கு 'டெபிட் ஏ.டி.எம்., கார்டு' தரவும் மகாராஷ்டிர பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இப்போதுள்ள இளைய தலைமுறையினரிடம் செலவழிக்கும் பழக்கம் உள்ள அளவுக்கு சேமிக் கும் பழக்கம் இல்லை. அதனால், அவர்களுக்கு பணத்தின் அருமையை புரிய வைத்து, செலவழிக் கும் பொறுப்பை கற்றுத் தரும் வகையில் இந்த திட்டத்தை கல்வித்துறை ஆரம்பித்துள்ளது. இதற்காக, பாங்க் ஆப் மகாராஷ்டிராவுடன் சேர்ந்து, 'மகா பாங்க் யுவ யோஜனா' என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி மாணவர்கள், வெறும் 10 ரூபாயை மட்டும் டிபாசிட் செய்து சேமிப்பு கணக்கு ஆரம்பித்தால் போதும்; வீட்டில் தரப்படும் 'பாக் கெட் மணி'யை சேர்த்துக் கொள்ளலாம். இந்த வங்கிக் கணக்குக்கு 'டெபிட் ஏ.டி.எம்., கார்டு' தரப்படும். அதை வைத்து மாணவர்கள் ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்து செலவழிக்கலாம்; அவ் வப்போது இதில் கண்காணிப்பும் செய்யப்படும். ஓராண்டுக்கு முன் ஆரம்பிக்கப் பட்டதாக இருந்தாலும், இப்போது தான் இந்த திட்டம், எல்லா பள்ளிகளையும் இணைத்து செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், 'இளைய தலை முறையினருக்கு பணம் எளிதில் கிடைத்து விடுகிறது. எக்கச்சக்க சம்பளம் வாங்கும் போது, அதை செலவழிக்கும் பொறுப்பு குறைகிறது. வரும் பணத்தின் போகும் வேகமும் தெரிவதில்லை. மேலும், கிரெடிட் கார்டு பயன்பாடு குறித்து இளைய தலைமுறையினருக்கு தெரிவதில்லை. அதனால் தான் கடன் வலையில் சிக்குகின்றனர். இதைத் தடுக்கவே, பள்ளி வயதில் இருந்தே மாணவர்களுக்கு பண பொறுப்புகளை பயிற்றுவிக்க முடிவு செய்து இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என்று தெரிவித்தனர்."

No comments: