தை பிறப்பை முன்னிட்டு பழநியில் சிறப்பு வழிபாடு: தினமலர்: "தை பிறப்பை முன்னிட்டு பழநியில் சிறப்பு வழிபாடு
ஜனவரி 15,2009,00:00 IST
பழநி : தை பிறப்பை முன்னிட்டு பழநி கோயிலில் சிறப்பு வழிபாடும், இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.தை பிறப்பை முன் னிட்டு பழநி ஆண்டவருக்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு, பால், பஞ்சாமிர்தம், விபூதி, உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள், சோடஷ உபச்சாரத்துடன் நடந்தது. கோயிலின் விழா, கட்டளைதாரர்களின் பட்டியல் விபரங்கள் அடங்கிய நாட்காட்டியை பழநி கோயில் இணை ஆணையர் தி.ராஜமாணிக்கம் வெளியிட்டார். மாலையில் கோயில் வெளிப்பிரகாரத்தில் நாதஸ்வர, தவுல் பயிற்சி பள்ளி மாணவர்களின் இன்னிசை, தேவார, திருவாசக பாடல்களை பாடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மலைக்கோயிலுக்கு செல்லும் படிகளுக்கு சந்தனம்,குங்குமம் வைத்து சூடம் கொளுத்தி பக்தர்கள் பூஜை செய்தனர். உப கோயிலான திருஆவினன்குடி, பெரியநாயகிம்மன் கோயில், பெரியாவுடையார் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 15, 2009
தை பிறப்பை முன்னிட்டு பழநியில் சிறப்பு வழிபாடு: தினமலர்
Posted by
Arul
at
Thursday, January 15, 2009


No comments:
Post a Comment