கோல்கட்டாவில் தரையிறங்கிய பாக்., விமானம்: தினமலர்: "கோல்கட்டாவில் தரையிறங்கிய பாக்., விமானம்
ஜனவரி 15,2009,00:00 IST
கோல்கட்டா : தாகாவில் கடும் மூடுபனி நிலவியதால், வங்கதேசம் சென்ற பாக்., விமானம் கோல்கட்டாவில் அவசரமாக தரையிறங்கியது. பாகிஸ்தானில் கராச்சி நகரிலிருந்து நேற்று அதிகாலை, விமானம் ஒன்று வங்கதேச தலைநகர் தாகாவிற்கு புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் பணி பெண்கள் உட்பட 200 பேர் இருந்தனர். கோல்கட்டாவிற்கு மேல், விமானம் பறந்து கொண்டிருந்த போது, தாகா விமான நிலையத்தில் இருந்து தகவல் ஒன்று வந்தது. அதில், தாகாவில் கடும் மூடு பனி நிலவுவதால், அங்கு விமானம் தரை இறங்க முடியாது என, தெரிவிக்கப்பட்டது. இதனால், கோல்கட்டா விமான நிலையத்தில் பாக்., விமானம் தரையிறங்கியது."
Google Search
தமிழ்நாட்டில் இன்று
Subscribe தமிழ்நாட்டில் இன்று posts via email
Thursday, January 15, 2009
கோல்கட்டாவில் தரையிறங்கிய பாக்., விமானம்: தினமலர்
Posted by Arul at Thursday, January 15, 2009
No comments:
Post a Comment